Thursday, August 10, 2017

நான் எழுதிய இரங்கல் கவிதை! !





நான் எழுதிய இரங்கல் கவிதை!

என் அருமை நண்பர் புலவர் வேள்நம்பி மறைந்து ஓராண்டு ஆனதை ஒட்டி  நான் எழுதிய இரங்கல் கவிதை!


தனக்குநிகர் இல்லையென உதவும் நண்பர்இவர்
தன்னிடத்தே கொண்டவராய் விளங்கும் பண்பர்
எனக்குமவர் பல்வகையில் உதவி செய்தார்ஈடே
இல்லாத அன்பதனை மழைபோல் பெய்தார்
மனக்கவலை ஏதுமில்லா குடும்ப வாழ்வேஏனோ
மறைந்தீரே மின்னலென பலரும் அழவே   
குணக்குன்றே வேள்நம்பி! நன்றா இதுவே-என்றே
குமுறுகின்ற நெஞ்சுதனைத் தேற்றல் எதுவே!
 
அகழ்வாரைத் தாங்குநில பொறுமைக் கொண்டே-தீமை
அடுத்தடுத்து செய்தாலும் விளக்கி விண்டே
இகழ்வாரும் பாராட்ட வாழ்ந்தார் இவரேஅதுவே
இயல்பாகக் இறுதிவரை மறைந்தார் எவரே!
புகழ்வாராம் போகவிட்டுப் புறமே பேசும்தீய
புல்லர்களின் முகம்காண அகமே கூச
திகழ்வாராம் வேள்நம்பி மறக்கப் போமோநாளும்
தேம்புகின்றோம் மீண்டுமுமை காணல் ஆமோ

அப்பப்பா நம்மிடையே மலர்ந்த நட்பே-கற்ற
அன்னையவள் தமிழ்தந்த அழியா பொட்பே
தப்பப்பா தவிக்கமனம் விட்டுச் சென்றீர்மீண்டும்
தவறாது சந்திக் வருவேன் என்றீர்
செப்பப்பா செப்பாது போனீர் எங்கே-அதனால்
செயலற்றார் எனைப்போல பலரும் இங்க
எப்பப்பா கண்போமென ஏங்க மனமேசேலம்
என்றாலே துயரத்தில் மூழ்கும் தினமே

நீரின்றி நானில்லை என்றே வாழ்ந்தோம்-அந்த
நினைவின்றி சென்றீரா துயரில் வீழ்ந்தோம்
ஏரின்றி உழவுதனை செய்வார் போன்றேஇன்றே
என்நிலமை ஆயிற்று சொல்லில் சான்றே
காரின்றே வான்மழையே வருமா என்றே- வாடிக்
காத்திருக்கும் உழவன்தன் நானும் இன்றே
வேரின்றி அற்றமரம் அந்தோ நானே-மேலும்

Wednesday, August 9, 2017

கடையெழு வள்ளல் பெருமை காதினால் கேட்ட தன்றி !


         வள்ளல் அழகப்பச்  செட்டியார் மறைந்த  போது  வருந்தி
          பாடிய இரங்கல் பா



கடையெழு வள்ளல் பெருமை
காதினால் கேட்ட தன்றி
நடைபெறக் காணோம் என்றே
நாடெலாம் பேச நன்றே
இடையொரு வள்ளல் அழகப்பா
இவ்வுலகில் நீயும் தோன்றி
கொடைதரக் கண்டோம் இன்றோ
கொடுத்தீரே உயிரும் நன்றோ!


புலவர் சா இராமாநுசம

குறிப்பு -நினைவில் நின்றவை

Tuesday, August 8, 2017

என்றோ எழுதிய என்னுடைப் பாடலும்- படமென எண்ணத் திரையில் வந்தது ஓடலும்




என்றோ எழுதிய என்னுடைப் பாடலும்- படமென
எண்ணத் திரையில் வந்தது ஓடலும்
ஒன்றோ இரண்டோ உரைத்திட வந்தேன்-உறவுகள்
உவந்து படித்ததை உரைப்பதே! செந்தேன்!
நன்றோ அறியேன்! நவில்வது நீரே!—மேலும்
நல்லது கெட்டது சொல்வது யாரே
இன்றோ நாளையே தொடங்கிட அதனை-கண்டே
எழுதுவீர்! வணக்கம் முடித்தேன்! இதனை!


புலவர் சா இராமாநுசம

Monday, August 7, 2017

மன்பதை உலகில் மனிதர்கள் எவரும் உண்பதுநாழி உடுப்பது நான்கு முழம்!




மன்பதை உலகில் மனிதர்கள் எவரும்
உண்பதுநாழி உடுப்பது நான்கு முழம்
என்பதை உணர்ந்தும் ஏனோ தானோ
இன்புற உலகில் ஏற்றது அறியாது
இருப்பதை வைத்து வாழ்ந்திடப் புரியாது
துன்பம் தந்திடப் பொருள்மிகத் தேடியே
தொலைப்பது வாழ்வை! தேவையா? அந்தோ!


புலவர் சா இராமாநுசம

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...