Monday, June 6, 2011

செய்தால் தமிழகம் பொங்கிஎழும்

         ஐநா அறிக்கை படித்தீரா-அடி
         வயிரும் எரிய துடித்தீரா
        பொய்யே இதுவரை வெறிநாயே-பக்சே
         புகன்றது முற்றும் அறிவாயே
        கையாய் உதவிய கல்மனமே-அந்த
         கயவனால் அழிய தமிழினமே
        செய்யாய் உதவி செய்யாதே-மேலும்
         செய்தால் தமிழகம் பொங்கிஎழும்

        ஒன்றும் அறியா அப்பாவி-பலர்
         உயிரைக் எடுத்தான் இப்பாவி
        இன்றே கட்டிவீர் கொடும்பாவி-தெருவில்
         இழுத்து புதைப்பீர் மண்தூவி
        கொன்றது நாற்பது ஆயிரமே-அறிக்கை
         கூறினும் மேலும்பல் ஆயிரமே
        தின்றதே அந்தக கழுகினமே-ஈழம்
         தேம்பத் தேம்ப பலதினமே

         எந்தக் கட்சியோ வேண்டாவே-தமிழ்
           இனமெனும் உணர்வே ஈண்டாவே
         சிந்தனை எதற்கு இனிமேலே-பாயும
         சிங்கமாய் எழவே இந்நாளே
         சொந்தமாய் ஈழம் அவர்காண-மன
         உறுதி கொள்வேம் பிறர்நாண
         நிந்தனை செய்யா எதிர்காலம்-உடன்
          நீக்குவோம் ஈழத்தின் அலங்கோலம்
  
           வேண்டாம் வேண்டாம் தமிழினமே-மேலும்
        வேடிக்கைப் பார்தால் உன்னினமே
           பூண்டோ டழிந்து போயிடுமே-அங்கே
        புல்லே முளைக்க ஆயிடுமே
           வேண்டும வேண்டும் தமிழினமே-ஈழ
        வெற்றிக்கு கொள்வோம் ஒருமனமே
           மீண்டும் மீண்டும் இதுஒன்றே-இன
        மேன்மையை உணர்த்தும் செயலின்றே

                      புலவர் சா இராமாநுசம்

1 comment :

  1. நெருப்பு வார்த்தையால் -இலங்கையின்
    கருப்பு நாட்களை
    செதுக்கியவிதம்
    அருமை ஐயா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...