Saturday, July 9, 2011

படமும் பாடலும்


ஆடிப்பிறப் பென்றே அடடா கொழுக்கட்டை
தேடிப்படம் போட்டீர் பணியார நல்தட்டை
நாடிப் பதம்பார்த்து நற்கவிதை சுவைசேர்த்தே
பாடிமுடித் தனிப்பின பணியாரம் தருவீரா
மூடித்திறந் தவாய் மூடாது காத்திருக்க
ஓடிவந்திடுவேன் ஒருவார்த்தை சொல்லவிட
வாடிப் போவேனா வற்றிவிட என்நாவும்
வடித்தாலும் முடித்தாலும் வற்றாதென் பாவே


புலவர் சா இராமாநுசம்

10 comments :

  1. naana first...
    aiyaa supper...poem

    ReplyDelete
  2. kavithaiyileaye kolukkaddai saappiddamaathiri irukku........hahahaah,,,,,,,,,,,,

    ReplyDelete
  3. ஆடி பிறப்பதற்கு முன்பே கவிதைக் கொழுக்கட்டை!

    ReplyDelete
  4. கவிதைப் பலகாரம் அருமையாய் சமைத்த கவிக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. நீங்கள் உணர்வுகளை மட்டுமல்ல
    உணவுகளையும் எழுதுவீர்கள்
    என நிருபித்த கவிதை இது
    சுவையான கவிதை ஐயா

    ReplyDelete
  6. கொழுக்கட்டையைக் கவிதையைத் தொட்டு உண்டேன்.

    ஆடி பிறக்க ஒரு வாரம் முன்னே ஓடிக் கொண்டு வந்து சேர்த்த வேகத்தின் பிரமிப்புடன்.

    ReplyDelete
  7. அற்புதமான கவிதை..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. பாராட்டுத் தெரிவித்த அனைவருக்கும் நன்றியோடு
    பலகாரத்தை செவி வழி உண்ண கவி வழி
    தருவேன்
    அன்புள்ள
    இராம‍நுசம்

    ReplyDelete
  9. வணக்கம் ஐயா, ஆடிப்பிறப்பிற்கு முன்பதாகவே, கவிதையால் உளத்தை நிரப்பும் சுவை மிகு கொழுக்கட்டையினைத் தந்திருக்கிறீங்க.

    அருமையான கவி ஐயா.

    ReplyDelete
  10. கொழுக்கட்டை கவிதை பிடித்திருக்கிறது

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...