Friday, July 8, 2011

உருவாகும்தனி ஈழம் உறுதியாய் இரு

ஆடுபுலி ஆட்டமென சொலவார் இதனை
அழகான படமாக போட்டீரதனை
நாடுகெட்டு போகாமல் தடுக்க நாமே
நாளதோறும் உழைத்துத் தாமே
பாடுபட்டுப் பொருள்தேட முயலல் நன்றே
பரவாமல் ஊழல்தான் ஒழியஇன்றே
கேடுகெட்ட அந்நிலையே வேண்டாமெனற
கொள்கையிலே என்றும்நீ உறுதியாய் இரு

யாராண்டால் நமக்கென்ன எண்ணல் கேடே
இதனாலே கெட்டத்துதான் நமது நாடே
பாராண்டான் தமிழனெ சொல்லித் தானே
பாழாக ஈழத்தை விட்டோம் வீணே
சீராண்ட அத்தமிழர் இலட்சக் கணக்கில்
செத்தாரே நமக்குள்ளே வந்த பிணக்கில்
ஊரோடு ஒத்துப்போ பிதற்றல் வீணே
உருவாகும்தனி ஈழம் உறுதியாய் இரு

புலவர் சா இராமாநுசம்

8 comments :

  1. கவிஞர்கள் சபதங்கள் தோற்றதாக சரித்திரம் இல்லை
    நிச்சயம் தனிஈழம் சத்தியமாய் உருவாகும்
    அந்த இனிய நாள் உருவாக அவரவர் அளவில்
    முடிந்ததைச் செய்யும் உறுதி எடுப்போம்

    ReplyDelete
  2. இந்த உறுதியும்,நம்பிக்கையும் அனைவரிடத்தும் இருப்பின் எதுவும் நடக்கும்!நன்று!

    ReplyDelete
  3. Ramani said...

    நன்றி இரமணி அவர்களே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. சென்னை பித்தன் said...

    நன்றி பித்தன் அவர்களே


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. நிச்சயம் சிந்திய இரத்தத்தில் செழித்திடும் தமிழ் மண்

    ReplyDelete
  6. சந்தத்தில் இட்ட சபதம்
    சகலத்தையும் வெல்லும் ஐயா

    ReplyDelete
  7. கவி அழகன்நன்றி said...

    நன்றி தம்பீ

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. A.R.ராஜகோபாலன் said

    நன்றி சகோ நன்றி
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...