Thursday, July 7, 2011

பணத்தைத் தேடி எடுப்பதற்கா

பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும்
பணத்தைத் தேடி எடுப்பதற்கா
உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே
உரைப்பதை காதில் கொள்வாரா
வெள்ளிப் பணமே தினம்கேட்டே-பெற்றோர்
வேதனை தன்னை இப்பாட்டே
சொல்லில் விளக்க வாய்பாக-தலைப்பூ
சொல்லிய வார்ப்புக்கே முதல்நன்றி

தனியார் பள்ளிகள் முதலாளி-பாடம்
தந்திடும் 'ஆ'சிரியர்தாமே தெழிலாளி
இனியார் எவரும் பணம்தேட-பள்ளி
ஏற்றதாய் எண்ணம் மனதோட
கனிவாய் சொல்லல் இதுஒன்றே -தம்
கல்விப் பணியாம் அதுவென்றே
பிணியாய் ஆனதே இந்நாளில்=இப்படி
பிழைப்பும மறைவது எந்நாளில்

ஏழைகள் கல்வி கற்பதற்கே-இன்று
இருப்பது அரசுப் பள்ளிகளே
பேழையுள் பணமே உள்ளவர்கள்-தேடிப்
போவதே தனியார் பள்ளிகளே
கோழைகள் நடுத்தர குடும்பங்கள-படும்
கொடுமைகள் தமக்கோர் அளவில்லை
ஏழையும பேழையும் இல்லாதார்-பாபம
எதிர்த்து எதுவும சொல்லாதர்
எனவே
வாழவழியும அவர்க் குண்டா-கல்வி
வளர்க்கச் செய்திடும் அருந்தொண்டா
சூழும் சற்றே ஓய்வாக -இங்கே
சொன்னதை முற்றும் ஆய்வாக
பாழும் ஏழை பணக்காரர்-என்ற
பாகு பாடே குணக்கேடாம்
வீழும் கல்வி வளர்சிதான்-இது
வேண்டுமா தனியார் பள்ளிகளே

புலவர் சா இராமாநுசம்

5 comments :

  1. 'ஆ'சிரியர்


    இந்த சொல்லே போதும் தற்கால கல்விபற்றி சொல்ல

    ReplyDelete
  2. //பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும்
    பணத்தைத் தேடி எடுப்பதற்கா //

    ஆரம்ப வரிகளே அருமை!
    அனைத்து வரிகளும் அருமையே.

    ReplyDelete
  3. சூழும் சற்றே ஓய்வாக -இங்கே
    சொன்னதை முற்றும் ஆய்வாக //
    nice...

    ReplyDelete
  4. கல்வியும் வியாபாரமாகிவிட்டது !

    ReplyDelete
  5. சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கம்
    நன்றி நன்றி நன்றி
    அன்புள்ள
    இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...