Friday, January 27, 2012

மறந்தால் அனைத்தும் நஞ்சாகும்!



உண்ணும் உணவும் நஞ்சாகும்-நாம்
     உட்கொள்ளும் மருந்தும் நஞ்சாகும்
எண்ணும் எண்ணமும் நஞ்சாகும்-நம்
     எழுதும் எழுத்தும் நஞ்சாகும்
கண்ணும் பார்வையால் நஞ்சாகும்-சில
     கருத்துகள் கூட நஞ்சாகும்
பண்ணும் பாடலில் நஞ்சாகும்-இறை
    படைப்பில் சிலவும் நஞ்சாகும்

காற்றும் இன்றே  நஞ்சாகும்-அலை
    கடல்தரும் உணவும் நஞ்சாகும்
தூற்றும் குணமே நஞ்சாகும்-உற்ற
    துணையே சிலருக்கு நஞ்சாகும்
போற்றும் போலிகள் நஞ்சாகும்-சேர்த்த
    பொருளும் சிலருக்கு நஞ்சாகும்
ஆற்றல் மிகுதியும் நஞ்சாகும்-ஏதும்
    அறியா நிலையும் நஞ்சாகும்

உற்றார் சிலரும்  நஞ்சாகும்-பெற்ற
      உரிமையும் கூட நஞ்சாகும்
பெற்றவர் பிள்ளைக்கே  நஞ்சாகும்-சில
      பிள்ளைகள் அதுபோல் நஞ்சாகும்
கற்றநல் கல்வியே நஞ்சாகும்-அதை
      கல்லார் வாழ்வும் நஞ்சாகும்
மற்றவை பலவே நஞ்சாகும்-இதை
     மறந்தால் அனைத்தும் நஞ்சாகும்


            புலவர் சா இராமாநுசம்







19 comments :

  1. அருமையான கவிதை

    ReplyDelete
  2. பெற்றவர் பிள்ளைக்கே நஞ்சாகும்-சில
    பிள்ளைகள் அதுபோல் நஞ்சாகும்
    கற்றநல் கல்வியே நஞ்சாகும்-அதை
    கல்லார் வாழ்வும் நஞ்சாகும்
    மற்றவை பலவே நஞ்சாகும்-இதை
    மறந்தால் அனைத்தும் நஞ்சாகும்
    நஞ்சாகும் பட்டியல் பகிர்வு அருமை ஐயா

    ReplyDelete
  3. கவிதை அரிய கருத்துக்களால் மிகவும் அழகு!!

    ReplyDelete
  4. அமுதமே நஞ்சாகும் நிலையை அழகாகச் சொல்லி நிற்கிறது கவிதை

    ReplyDelete
  5. பல விடயங்களை சொல்லும் அழகிய கவிதை

    ReplyDelete
  6. நஞ்சு இப்போது பலர் நெஞ்சில்...

    பயமாகத்தான் உள்ளது உங்கள் பட்டியல் பார்த்து...

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா நலமா?
    உங்கள் பட்டியல் உண்மையிலேயே பயமாய்தான் இருக்கு..!!
    அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. எதுவும் அளவோடு இருந்தால் நஞ்சில்லை என்பார்களே ஐயா !

    ReplyDelete
  9. dhanasekaran .S said...

    தங்கள் வாழ்த்துக்கு மிக்க
    நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. sasikala said...


    தங்கள் வாழ்த்துக்கு மிக்க
    நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. மனோ சாமிநாதன் said

    தங்கள் வாழ்த்துக்கு மிக்க
    நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. சென்னை பித்தன் said...

    தங்கள் வாழ்த்துக்கு மிக்க
    நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. K.s.s.Rajh said...


    தங்கள் வாழ்த்துக்கு மிக்க
    நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. ரெவெரி said...


    தங்கள் வாழ்த்துக்கு மிக்க
    நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. காட்டான் said...



    தங்கள் வாழ்த்துக்கு மிக்க
    நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. தமிழ்வாசி பிரகாஷ் said


    தங்கள் வாழ்த்துக்கு மிக்க
    நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. ஹேமா said...


    தங்கள் வாழ்த்துக்கு மிக்க
    நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...