Tuesday, March 13, 2012

ஈழம் மேன்மை கொண்டே மலரட்டும்!


மீண்டும் இங்கே பாடுகின்றேன்-கருணை
     மத்தியில்  எங்கே? தேடுகின்றேன்
வேண்டும் மௌனம் கலைந்திடவே-உடன்
     விரைவில் முடிவு எடுத்திடவே
மாண்டவர் எம்மவர் நடந்தகதை-அதை
     மாற்றிட செய்வீர் இன்றேயிதை
சீண்டிட வேண்டாம் மேன்மேலும்-தீய
     சிங்களர் வாழந்திட வருநாளும்!

அச்சம் கொள்ள கேட்டவரும்-அந்தோ
     அழுது அலற பார்த்தவரும்
பச்சிளம் பாலகன் படுகொலையை-இன்று 
     பார்த்தன உலகமே கொலைவெறியை
துச்சமா? எம்மினம் எண்ணாதீர்-சிறு
     துரும்பும் தூணாம்! பண்ணாதீர்
மிச்சம் உள்ளவர் வாழட்டும்-ஈழம்
     மேன்மை கொண்டே மலரட்டும்

இமயம் வரையில் வென்றானே-இன்று
     இதயம் வெடிக்க நின்றானே
சமயம் இதுதான் ஆள்வோரே-பெற்ற
     சாபம் நீங்கிடும் மீள்வீரே!
அமையும் ஈழத்தில் நல்வாழ்வே-சிங்கள
     அரசுக்கு எதிராய் ஓட்டளிப்பின்
உமையும் வாழ்த்திப் புகழ்வாரே-எனில்
    உலகில் தாழ்த்தி இகழ்வாரே

கன்றின் வாழ்வும் பட்டதென-தேர்
    காலில் மகனை இட்டவனை
இன்றும் போற்றும் எம்மினமே-என
    எண்ணிப் பாரீர் இத்தினமே
நன்றே செய்வீர் நம்புகிறோம்-ஆனால்
    நடந்ததை நினைப்பின் விம்முகிறோம்
ஒன்றே குரலாய் தமிழினமே-இங்கே
   ஒலிக்கும் ஒலியும் கேட்கிலையா ?

                            புலவர் சா இராமாநுசம்

  

16 comments :

  1. மிகவும் சரியான நேரத்தில் வந்திருக்கும் ஆறுதல் மிக்க கவிதை ஐயா! அனைத்தையும் கேள்விப்பட்டு நொந்து போயிருக்கோம்! நாளை புதன் கிழமை இரவு 10.55 ஐ எப்படி கடக்கப் போகிறோம் என்றே தெரியவில்லை! உங்கள் கவிதை ஆறுதலைத் தருகிறது ஐயா!!!

    ReplyDelete
  2. அழுவதை தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை.

    ReplyDelete
  3. எத்தனை நாள் அழுவது..... அழுது அழுது கண்கள் வாடின

    ReplyDelete
  4. சிங்கள ஓநாய்களும் சோனியா என்னும் அண்டவந்த பிடாரியும் நம்மை நசுகுறது

    ReplyDelete
  5. விரைவில் தமிழர்கள் நல்வாழ்வு பெற இறைவனை வேண்டுவோம்....

    ReplyDelete
  6. விரைவில் நல்லது நடக்க வேண்டும்.

    ReplyDelete
  7. சனல் 4 தரும் நாளைய அதிர்வைத் தாங்கமுடியாமல் அவதிப்படுகிறோம்.பிறகும் அழுவோம்.துடிப்போம்.இதுவும் கடந்துபோகும் என்பதாகிறது எம் வாழ்வு !

    ReplyDelete
  8. சரியான தருணத்தில் நீங்கள் வடித்த கவிதை...துயரை குறைக்கும் என்பதில் ஐயமில்லை அய்யா...

    ReplyDelete
  9. ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said

    என்ன எழுதி என்ன பயன்?
    மத்தியில் மாற்றம் வராது என்றே தெரிகிறது!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. Sekar said...

    என்ன எழுதி என்ன பயன்?
    மத்தியில் மாற்றம் வராது என்றே தெரிகிறது!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. thala said...

    என்ன எழுதி என்ன பயன்?
    மத்தியில் மாற்றம் வராது என்றே தெரிகிறது!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. thala said...

    நன்றி! நண்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. koodal bala said...

    என்ன எழுதி என்ன பயன்?
    மத்தியில் மாற்றம் வராது என்றே தெரிகிறது!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. சென்னை பித்தன் said...

    என்ன எழுதி என்ன பயன்?
    மத்தியில் மாற்றம் வராது என்றே தெரிகிறது!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. ஹேமா said...

    என்ன எழுதி என்ன பயன்?
    மத்தியில் மாற்றம் வராது என்றே தெரிகிறது!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. ரெவெரி said

    என்ன எழுதி என்ன பயன்?
    மத்தியில் மாற்றம் வராது என்றே தெரிகிறது!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...