Saturday, May 26, 2012

ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்!


 ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது
    உடைந்தால் வருவது வீழ்வாகும்!
உற்றவர் உறவினர் தம்மோடும்-நல்
    உறவே கொண்டால் உம்மோடும்!
மற்றவர் தருவது அன்பாகும்-இதை
    மறப்பின்  வருவது துன்பாகும்
!கற்றவர் கல்லார் பேதமிலை-நாளும்
   கருதி நடப்பின் சேதமிலை

சாதிப் பூசல் வேண்டாமே-வீண்
   சமயப் பூசல் வேண்டாமே
பீதியைக் கிளப்பி நாடெங்கும்-நம்
   பிள்ளைகள் பெண்கள் வீடெங்கும்
வீதியில் நடக்கவே அஞ்சிடவே-வரும்
    வேதனை ஒன்றே மிஞ்சிடவே
ஆதியில் உண்டா சாதியென-நீர்
    ஆய்ந்தால் அறிவீர் பாதிலென

மதவெறி கொண்டே அலையாதீர்-வெறி
     மதமிகு வேழமாய்த் திரியாதீர்
இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம்
    எதுவும் சம்மதம் சாற்றுங்கள்
அதன்வழி அழியும் கேடுகளே-செய்தி
     அறியத் தருநல் ஏடுகளே
பதமுற எதையும் போடுங்கள்-கலவரம்
    பரவா வழிதனை நாடுங்கள்!

உலக மெங்கும் போராட்டம்-பெரும்
    ஊழல் வாதிகள் வெறியாட்டம்!
கலகம் இல்லா நாடில்லை-தினம்
   காணும் செய்திக்கோர் அளவில்லை
திலகம் காந்தி புத்தரென-வாழ்ந்த!
   தேசமும் மதவெறி பித்தரென!
அளவில் நாளும் நடக்கிறதே-மக்கள்
    அஞ்சிட காலம் கடக்கிறதே

            புலவர் சா இராமாநுசம்

26 comments :

  1. தத்துவ கவிஞர், எனறோ, பொதுவுடைமைப் புலவர் என்று நான் கொடுக்கும் பட்டத்தினை ஏற்றுக்கொள்வீர்களா?

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. வணக்கம் ஜயா எப்படி சுகம்?
    அருமையான கவிதை நீண்டநாட்களுக்கு பின் உங்கள் கவிதைகளை மீண்டும் படிக்கின்றேன்

    ReplyDelete
  4. ஒன்று பட்டு தரணியை வெல்வோம் ..!

    ReplyDelete
  5. மதவெறி கொண்டே அலையாதீர்-வெறி
    மதமிகு வேழமாய்த் திரியாதீர்
    இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம்
    எதுவும் சம்மதம் சாற்றுங்கள்

    உணர்வார்களோ உணர்த்தல் உன்னத வாழ்வாகும் . சிந்தனை சிறப்பு ஐயா .

    ReplyDelete
  6. புரியாதவர்களுக்கு சொல்லலாம். புரிந்தும் புரியாததுபோல் நடிப்பவர்க்கு சொல்லியும் பயன் இல்லை அண்ணா.

    ReplyDelete
  7. அருமையான சிந்தனையைத் தூண்டி விடும் கவிதை ஐயா!

    மதவெறி கொண்டே அலையாதீர்-வெறி
    மதமிகு வேழமாய்த் திரியாதீர்
    இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம்
    எதுவும் சம்மதம் சாற்றுங்கள் /////

    அருமை......!

    ReplyDelete
  8. சொல்லுங்கள் ஐயா.ஒருசிலரின் காதுகளில் விழுந்தால்கூட சந்தோஷமே.எத்தனை அடுக்கடுக்கான நல்ல வார்த்தைகள்.மனதில் பதிப்போம் !

    ReplyDelete
  9. இனம் மொழி சாதி வேறுபாடின்றி
    ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வென
    நெஞ்சில் பதியச் செய்யும் கவிதை ஐயா..

    ReplyDelete
  10. மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்....மனதில் ஆழமாக பதிவும் பாடலாகவும் இதனை உருவாக்கலாம்

    ReplyDelete
  11. //உலக மெங்கும் போராட்டம்-பெரும்
    ஊழல் வாதிகள் வெறியாட்டம்!
    கலகம் இல்லா நாடில்லை-தினம்
    காணும் செய்திக்கோர் அளவில்லை
    திலகம் காந்தி புத்தரென-வாழ்ந்த!
    தேசமும் மதவெறி பித்தரென!
    அளவில் நாளும் நடக்கிறதே-மக்கள்
    அஞ்சிட காலம் கடக்கிறதே//
    உண்மையை ,உலக நிகழ்வுகளை தமிழில் படம் பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  12. // சாதிப் பூசல் வேண்டாமே-வீண்
    சமயப் பூசல் வேண்டாமே //.
    உங்கள் உயர்ந்த எண்ணப்படியே அனைவரும் நடந்தால் எவ்வளவோ நன்மைகள் நடக்கும்.

    ReplyDelete
  13. காலத்துக்கு ஏற்ற அறிவுறுத்தல்.
    நன்று புலவரே.

    ReplyDelete
  14. முஹம்மது யாஸிர் அரபாத் said...

    அன்பரே
    ஏற்றுக் கொள்வதோடு நன்றியும் நவில்கிறேன் ஆனால், இதுவரை எனக்குப் பலரும் கொடுத்த விருதினை
    ஏற்றுக் கொண்டதோடு என் வலையில் அதைத் போடுவதில்லை, என்பதைத் தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன். மன்னிக்க!

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  15. K.s.s.Rajhsaid...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  16. வரலாற்று சுவடுகள் said...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  17. சசிகலா said...


    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  18. GowRami Ramanujam Solaimalaisaid...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  19. மாத்தியோசி - மணி said...


    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  20. ஹேமாsaid...

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  21. மகேந்திரன் said...


    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  22. சிட்டுக்குருவிsaid

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  23. T.N.MURALIDHARAN said...


    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  24. தி.தமிழ் இளங்கோsaid...


    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  25. முனைவர்.இரா.குணசீலன் said...


    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  26. hello sir/madam
    i read your post interesting and informative. i am doing research on bloggers who use effectively blog for disseminate information.i glad if u wish to participate in my research. if you are interested please contact me through mail. thank u

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...