Thursday, August 29, 2013

துண்டுச் செய்திகளும் உம் வரவைத் தூண்டும் செய்திகளும்


அன்பின்  இனிய   உறவுகளே!
                                        வணக்கம் !கணக்கில!

பதிவர் சந்திப்புக்கான  கவல்  துறையின்     ஒப்புதலும்  பெற்று  விட்டோம்
நண்பர்,மதுமதி  அரசன் , செயக்குமார் ஆகிய  நாங்கள்  நால்வரும் சென்றிருந்தோம் .சென்ற  ஆண்டைப்  போலவே  இந்த ஆண்டும் முதலில்  ஏனோ, தானோ என்று  நம் கடிதத்தை வாங்கிய  காவல்  துறை அதிகாரிகள்  தமிழ்ப்  புலவர்களும்  கவிஞர்களும் எழுத்தாளர்களும்  நடத்தும்  விழா என்று அறிந்ததும்  காட்டிய அன்பும்  மரியாதையும் , கனிவும்  கண்டு  உவந்து போனோம்
                  இது, நம் அன்னைத்  தமிழுக்குக் கிடைத்த  மரியாதை  என்பதை   உணர்ந்து  மிகவும்    பெருமைப்  பட்டோம்
                     வாழ்க ! தமிழகக்  காவல்  துறை!  வளர்க ! அவர்கள்  தமிழ்மொழிப்
                                                                       பற்று!

                                                                    நன்றி!
உறவுகளே!!
                வலைவழி  விழா  பற்றிய அனைத்துச்  செய்திகளும்   விரிவாக  அறிந்திருப்பீர்கள்!
                பல  பதிவர்களும்  தங்கள்  எழுத்துத்  திறமையால்  உங்கள் வரவை விரும்பியும் , வேண்டியும்  எழுதியுள்ள  பதிவுகள்  பாராட்டத் தக்கன!

வழங்கப் படும்  உணவு  வகைகளின்  பட்டில் தரப்பட்டுள்ளன!                       உங்கள்  தேவை , சைவமா, அசைவமா  என்பதை  முன் கூட்டியே பதிவு செய்தல் அவசியம்!
                          அவ்வாறு  செய்தால்  உரிய ஏற்பாடு  செய்ய  இயலும்

நானும்   எனது  பங்காக  , உங்கள்  அனைவரைம்  தவறாமல் வருமாறு சிரம் தாழ்த்தி கரம் கூப்பி  வேண்டுகிறேன்
               வருக!   வருக! விழாவினைச் சிறப்புற நடத்தித்  தருக!  தருக!
                                                      நன்றி!
                                                                            புலவர்  சா இராமாநுசம்

7 comments :

  1. இனிக்கும் செய்தி
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. இனிக்கும் செய்தி
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. நிச்சயம் மகிழ்ச்சியான செய்தியே

    ReplyDelete
  4. பதிவர் திருவிழா சிறப்புடன் நடந்திட, வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  5. பதிவர் சந்திப்பன்று வெளியூர் செல்லவிருப்பதால் கலந்துகொள்ள இயலவில்லை ஐயா. விழா சிறப்பாக நடைபெற அடியேனின் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. கிடைத்திருக்கும் அங்கீகாரம் மனதை மகிழ்ச்சியில்
    துள்ள வைத்தது.
    வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  7. ஈழத்தில் இருப்பதால் பதிவர் திருவிழாவில் கலந்துகொள்ளமுடியவில்லை.பதிவர் திருவிழா சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...