Sunday, January 26, 2014

குடியரசு தின வாழத்துக் கவிதை !




குடிகெடுக்கும் குடியொழியும் நாள்தான்  ஒன்றே –உண்மைக்
    குடியரசாய்  கொண்டாடி  மகிழ்வோம்  நன்றே -மேகம்
இடியிடித்தும்  மழையின்றி  போதல்  போல – வீணே
     எண்ணற்ற தியாகிகளின்  தியாகம்  சால -அழிந்து
தடியெடுத்தோர் ஆளுகின்ற நிலைதான்  கண்டோம்- நாளும்
     தாங்கிடவே  இயலாத்  துயரே!  கொண்டோம் –நல்ல
முடிவெடுத்து  வாக்குகளைப்  போட  வேண்டும் –என்ற
    முடிவொன்றே குடியரசு  வாழ்த்தாம்  ஈண்டும்

                    புலவர்  சா  இராமாநுசம்

21 comments :

  1. எனதினிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. குடியரசு தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. குதூகல் குடியரசு தின வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  4. இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. வருகிற தேர்தலில் வரும் முடிவு ,நாம் எதிர்ப்பார்க்கும் முடிவுகளாய் இருக்குமென்று நம்புவோம் !
    த ம 5

    ReplyDelete
  6. சிறப்பான கவிதை ஐயா. உண்மையான குடியரசாக மாறவேண்டும்

    ReplyDelete
  7. இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. முடிவெடுத்து வாக்குகளைப் போட வேண்டும் –என்ற
    முடிவொன்றே குடியரசு வாழ்த்தாம் ஈண்டும்

    arumai.

    ReplyDelete
  9. எத்தர் எல்லாம் அழியட்டும்
    எங்கள் மக்கள் வாழட்டும்
    நித்தம் கொடுமை நல்கின்ற
    நிலமை மண்ணில் மாறட்டும்
    சித்தம் கலங்கி வாக்களிக்கும்
    சின்னத் தனங்கள் மறையட்டும்
    துத்தன் கலைஞன் மடிந்திட்டால்
    துலங்கும் தமிழர் திருநாடே ..!

    இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
    வாழ்க பாரதம் வளர்க எம்மக்கள்

    ReplyDelete
  10. இனிய குடியரசு நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. அருமையான கவிதை. இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள் புலவர் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...