Thursday, February 20, 2014

தள்ளியே நாட்களை வைத்துள்ளார்-தூக்குத் தண்டனை இரத்தா செய்துள்ளார்!


மக்கள் எழுச்சி கண்டு நீதிமன்றம் எட்டு வாரம்
தூக்குத் தண்டனையைத் தள்ளி வைத்தபோது போராட்டம்
தொய்வின்றி தொடர எழுதியது!

தள்ளியே நாட்களை வைத்துள்ளார்-தூக்குத்
தண்டனை இரத்தா செய்துள்ளார்
உள்ளுவீர் தமிழரே ஓயாதீர்- இன
உணர்வில் அணுவும் தேயாதீர்
கொள்ளியை வைத்தவர் அவரென்றே-மேலும்
கொடுமை செய்வது தவரென்றே
எள்ளியே உலகம் நகைக்கட்டும்-செய்ய
ஏதும் வழியின்றி திகைக்கட்டும்

மக்கள் எழுச்சி கண்டாரே-இன்று
மாநிலம் மாற்றிக் கொண்டாரே
இக்கணம் முதலாய் மேன்மேலும்-ஏதும்
இடையின்றி ஒவ்வொரு நாள்போலும்
திக்கது எட்டும் பரவட்டும்-இனத்
தீயெனும் உணர்வே விரவட்டும்
தக்கது அறவழி போராட்டம்-உயிர்
தருவது அல்லென கூறட்டும்

எட்டு வாரம் எதற்காக-ஆட்சி
இணங்கி வருமா இதற்காக
குட்டுப் பட்டதை மறப்போமா-மேலும்
குட்டுப் படுதல் சிறப்பாமா
ஒட்டும் உறவும் வேண்டாமே-இன
உணர்வது ஒன்றாம் ஈண்டாமே
கொட்டும் முரசே ஒலிக்கட்டும்-வெற்றி
கொண்டதை சங்கே முழங்கட்டும்

முடங்கிட அனைத்து வேலைகளும்-நகரின்
முக்கிய அனைத்து சாலைகளும்
தொடங்கிட ஊர்வல ஆர்பாட்டம்-நாளும்
தொடர்கதை ஆகிட போராட்டம்
திடங்கொள செய்வீர் மறவர்களே-நன்கு
திட்டமே வகுப்பீர் உறவுகளே
அடமிகு அரசும் இறங்கிவரும்-போர்
அறவழி செய்யின் நன்மைதரும்


மீள்பதிவு!             புலவர்  சா  இராமாநுசம்

5 comments :

  1. வணக்கம்
    ஐயா.

    ஒரு புரட்சிக் கவிதை படிக்கும் போது.. ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது.. கட்டாயம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய கடமை.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. #அடமிகு அரசும் இறங்கிவரும்#
    நீங்கள் சொன்னது நடந்து விட்டது அய்யா !
    த ம 3

    ReplyDelete
  3. நல்லதொரு பகிர்வு ஐயா! ரத்தான செய்தி வரும் சமயம்....அது தள்ளிவைக்கபட்டது என்ற ரத்தம் கொதிக்கும் செய்தியும் வந்துள்ளதே ஐயா!

    த.ம.

    ReplyDelete
  4. நல்லதொரு பகிர்வு... நன்மை விரைவில் வர வேண்டும் ஐயா...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...