Monday, September 15, 2014

அண்ணாவின் பிறந்தநாள் ஆகு மின்றே- இங்கே அனைவருமே மாலையிட்டு வணங்க நன்றே!



அண்ணாவின் பிறந்தநாள் ஆகு மின்றே- இங்கே
அனைவருமே மாலையிட்டு வணங்க நன்றே
கண்ணான அவர்கொள்கை காற்றில் போக-பலரும்
கைகழுவி விட்டதுவே உண்மை யாக!

ஒன்றேதான் குலமென்று உரைத்த பின்னும்- உலகில்
ஒருவன்தான் தேவனென உரைக்க, இன்னும்
இன்றேதான் நிலையென்ன பாரு மிங்கே – பதில்
எவரேனும் சொல்வாரா கூறு மிங்கே!

வெற்றுக்கே ஆரவாரம் நடத்து கின்றார் –பகல்
வேடமிட்டே வாழ்நாளைக் கடத்து கின்றார்
உற்றுத்தான் நோக்குவார் அறிந்த உண்மை!-இதனால்
உண்டாகா ஒருநாளும் உரிய நன்மை!

புலவர் சா இராமாநுசம்

6 comments :

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று அவரை மறவாத உங்கள் தமிழ் நெஞ்சம் வாழ்க!
    த.ம.1

    ReplyDelete
  3. தமிழறிவுச் சுடருக்கு அருமையான பாமாலை பெருந்தகையே...

    ReplyDelete
  4. தங்கள் பாவண்ணத்தில்
    அண்ணாவின் எண்ணங்கள்
    நினைவூட்டுகிறதே!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...