Wednesday, December 17, 2014

மன்றாடிக் கேட்கின்றோம் மீண்டும் மீண்டும்!


மாண்புமிகு முதல்வரே எண்ணிப் பாரீர்-இன்றே
மனம்குமுறும் மக்கள்துயர் ஆய்ந்து காரீர்!
மீண்டுமிங்கே விலைவாசி உயர்ந்து போக-மேலும்
மின்சாரக் கட்டணமோ எமனாய் ஆக!
வேண்டிபலர் விண்ணப்பம் தந்தும் வீணே -ஏதும்
விடிவில்லை! முடிவதுவே! வேதனை தானே!
ஆண்டவனே !என்றிங்கே மக்கள் நாளும்-எண்ணி
அல்லல்படல்! விதுயென்ப! இதுதான் போலும்!


ஆற்றாது அழுகின்ற அவலம் நன்றா -இதுவும்
ஆளுகின்ற அரசுக்கு அழகாம் என்றா?
சாற்றாது சத்தமின்றி ஏற்றி விட்டீர் –அந்தோ!
சரியல்ல! போராட தூண்டி விட்டீர்!
ஊற்றான ஊழலையே ஒழித்தால் போதும் -மேலும்
உயர்த்திடவே தேவையில்லை! நீங்கும் தீதும்!
மாற்றாகும் இவ்வழியே! செய்தல் வேண்டும் -என்றே
மன்றாடிக் கேட்கின்றோம் மீண்டும் மீண்டும்!

புலவர் சா இராமாநுசம்

14 comments :

  1. வேண்டிபலர் விண்ணப்பம் தந்தும் வீணே -ஏதும்
    விடிவில்லை! முடிவதுவே! வேதனை தானே!
    ஆண்டவனே !என்றிங்கே மக்கள் நாளும்-எண்ணி
    அல்லல்படல்! விதுயென்ப! இதுதான் போலும்! //
    அருமை ஐயா...காது கொடுத்து அவர்கள் கேட்டால் எல்லோருக்கும்...நலம் பயக்கும்.

    தம 1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  2. ஊழலை ஒழிப்பதை விடுத்து. இப்படி அடிப்படை தேவைகள் மீதான விலைவாசிகளை ஏற்றுவது முறையா ? இது தான் ஆளும் அழகா ? மிகச்சரியாக கேட்டீர்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  3. ஆமாம் ஐயா!
    எவ்வளவுதான் கோரிக்கைவைத்தாலும் அவர்கள்
    காதில் விழுந்தாற்தானே!..

    நல்ல ஆதங்கக் கவிதை ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  4. மின் கட்டணம்
    பெரும் சுமையாகத்தான்
    மாறிக் கொண்டிருக்கிறது ஐயா
    தம 5

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  5. வணக்கம்
    “ஐயா
    காலம் உணர்ந்து கவி வடித்த விதம் கண்டு மகிழ்ந்தேன். பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:

    கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. மக்களின் சார்பான விண்ணப்பம் சரியே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  7. நல்லது நடந்தால் சரி தான் ஐயா...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...