Friday, January 23, 2015

தொட்டால் தொடரும் வெற்றிப் பெறுமே வாழ்த்து !



 வாழ்த்து !

தொட்டால் தொடரும் வெற்றிப் பெறுமே- சங்கரைத்
தேடிபல வாய்புகளும் மேலும் வருமே
திட்டமிட்டு எச்செயலும் செய்வார் அவரே- இனிக்கும்
தேன்தானே! அவர்குணமே! இல்லை நிகரே


இரவுபகல் பாராது எடுத்தப் படமே-குறை
இருக்குமெனச் சொல்வதற்கு இல்லை இடமே
வரவுக்கே வழிசெய்யும் மக்கள் கூட்டம்- நிரம்பி
வழிந்திடுமே! அரங்கத்தில் வருவோர் நாட்டம்!

வருங்காலம் இதையறியும் உண்மை என்றே –திரை
வரலாற்றில் தனியிடமே பெறுமாம் இன்றே
திருநாளாய் தொடரட்டும் சங்கர் வெற்றி –அவர்
தொட்டால் தொடரட்டும்! நாளும் பெற்றி!

புலவர் சா இராமாநுசம்

18 comments :

  1. சங்கருக்கான வாழ்த்து அருமை ஐயா.
    அவரின் அயராத உழைப்பு , திட்டமிடல்...அவரது வெற்றி.

    ReplyDelete
  2. சங்கருக்கு பொருத்தமானதே....
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா.

    சங்கருக்கு வாழ்த்திய வாழ்த்து மாலை.. நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா
    த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ’வெற்றிப் பெறுமே’ என்று எழுதி இருக்கிறீர்கள். வெற்றி பெறுமே என்பதுதான் சரி! மற்றவர்கள் இலக்கணப் பிழையாக எழுதினால்கூடப் பரவாயில்லை. நீங்கள் இப்படி எழுதலாமா?

    ReplyDelete
    Replies
    1. வெற்றிப் பெறுமே என்று எழுதி இருக்கிறீ (ர்) கள். வெற்றி பெறுமே என்பதுதான் ச(ரி)!
      இதில் கூட '(ர்) (ரி)!' ஆகிய எழுத்து வடிவங்கள் தவறுதானே இதை சரி செய்ய என்ன வழி

      Delete
  5. 2) தேடி பல 3) வாய்புகளும் 3) எடுத்தப் படமே 4) திருநாளாய் தொடரட்டும் இவையும் பிழைகளே!

    ReplyDelete
  6. 2) தேடி பல 3) வாய்புகளும் 3) எடுத்தப் படமே 4) திருநாளாய் தொடரட்டும் இவையும் பிழைகளே!

    ReplyDelete
  7. மேலும் 4 பிழைகளைச் சுட்டி இருந்தேனே?

    ReplyDelete
  8. மேலும் 4 பிழைகளைச் சுட்டி இருந்தேனே?

    ReplyDelete
  9. ’வெற்றிப் பெறுமே’ என்று எழுதி இருக்கிறீர்கள். வெற்றி பெறுமே என்பதுதான் சரி! மற்றவர்கள் இலக்கணப் பிழையாக எழுதினால்கூடப் பரவாயில்லை. நீங்கள் இப்படி எழுதலாமா?

    ReplyDelete
  10. நண்பரே! ஒற்றுப் பிழைகளைச் சுட்டிய தங்களுக்கு நன்றி நான் , இப்படி எழுதலாமா என்ற கேள்வியும் சரியானதே! மன்னிக்க! வயது ( 83 ) கடந்த நிலையில், கண் பார்வை, தட்டச்சு செய்யும் போது தடுமாற்றம்
    முதுகு வலி, நினைவாற்றலில் ,ஏற்படும் தவறுகள், என பல தொல்லைகளை எண்ணியே இப்போது அதிகம் எழுதுவதில்லை!
    மிக்க நன்றி!

    ReplyDelete
  11. கேபிள் அண்ணாவின் தொட்டால் தொடரும் வெற்றி பெற வாழ்த்துவோம் ஐயா...

    ReplyDelete
  12. உங்கள் வாழ்த்துக்கு வலிமை அதிகம் ஐயா

    ReplyDelete
  13. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html

    ReplyDelete
  14. திரை உலகில் அந்த சங்கரைப் போல் ,நம்ம சங்கரும் வெற்றி பெறுவார் !
    த ம 5

    ReplyDelete
  15. தொடரட்டும் வெற்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. தொட்டால் தொடரும் வெற்றி தொடரும்....

    ReplyDelete
  17. சென்னை வந்தால் பலரையும் சந்திக்கலாம் தான்.
    வடலூரில் நண்பர் சுஷ்ரூவா அவர்களது ஒழுங்குபடுத்தலில் வருகிறேன். இம்முறை சென்னை வர நேரமிருக்காது. அடுத்த ஆண்டு நண்பர் ரூபன் அவர்களுடன் சென்னை வந்து பதிவர்கள் எல்லோரையும் சந்திக்க எண்ணியுள்ளேன்.
    மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...