Monday, February 16, 2015

தில்லிவாழ் மக்களெல்லாம் புத்தி சாலி-போட்டார் தேர்தலிலே மதவாத எதிர்ப்பு வேலி!


தில்லிவாழ் மக்களெல்லாம் புத்தி சாலி-போட்டார்
தேர்தலிலே மதவாத எதிர்ப்பு வேலி
சொல்லிவைத்து அடித்ததுபோல் அடடா வெற்றி –என்ன,
சொல்லியதைப் பாராட்ட அறியேன் ! பெற்றி!
எள்ளிநகை யாடியவர் போனார் எங்கே –யாரும்
எதிர்பாரா மாற்றம்தான் நிகழ அங்கே!
கிள்ளிவிட்டார் தாமரையைத் தண்டும் சேர –ஏதோ
கேலியல்ல உணரட்டும் ஆள்வோர் தீர


புலவர் சா இராமாநுசம்

9 comments :

  1. வணக்கம்
    ஐயா
    இதுதைான் சொல்வர்கள் ஐயா
    நம்ம ஊர் பேச்சில்
    நெற்றி அடி என்பார்கள் த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமையாக சொன்னீர்கள் ஐயா வாழ்த்துகள்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. தலை நகரைப் பிடித்த தாமரையின் வளர்ச்சி ,அங்கிருந்தே சரியத் தொடங்கி இருப்பது சரியானதே !
    த ம 4

    ReplyDelete
  4. அருமையாச் சொல்லியிருக்கீங்க ஐயா...

    ReplyDelete
  5. தில்லி மக்களைப் பாராட்டுவோம்
    தம +1

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...