Friday, March 13, 2015

முகநூல் தந்த துணுக்குகள்!




தாயின் அன்பு கடல் போன்றது! எப்படியென்றால் காவிரியின் நீரை ஏற்றும் கொள்ளும் கடல் கூவம் ஆற்று நீரை வேண்டாமென்றா தள்ளி விடுகிறது! இல்லையே! அதுபோல தான் பெற்ற மக்களில் ஒருவன் கெட்டவனாக இருந்தாலும் அவனை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் தாயுக்கு மட்டுமே உண்டு!

இன்று, அரசியல் ஒரு தொழிலாகி விட்டது! இதற்கு முதலோ, உழைப்போ தேவையில்லை! பணத்தைத் தேடவேண்டிய அவசியம் கூட இல்லை! அது தானேத் தேடிவரும்!அரசியல் வாதிகளின் சொல் வாக்கு கேட்கவும் செல்வாக்கு நாளுக்கு நாள் கூடவும், கண்டேதான் மதத்தின் பேராலும், சாதி , இன, என பல்வேறு வகையிலும் ஆளுக்கு ஆள் , நாளுக்கு நாள் கட்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன! இது எங்கு போய் முடியுமோ!!!?

உறவுகளே!
இன்றைய சூழ்நிலையில் கூட்டுக் குடும்பம் என்பதே பெரும் பாலும் இல்லாமல் போய்விட்டது! எனவே ,குடும்பத்தில் வாழ்வோர் எண்ணிக்கை சுருங்கி விட்டது! குடும்பம் என்பதே ஒருவர் கவலையை மற்றவர் குறைப்பதற்காக ஏற்பட்ட அமைப்பு என்பதை குடும்பத்தில் உள்ளவர் உணரவேண்டும்! தேவை வரும்போது யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் தான் இல்லம் அமைதி காணும்

பணக்காரன் பக்கம்தான் ஊரும் செல்கிறது என்பது உண்மைதானே!
அதனால்தான் அவர்கள் எதையும் செய்வற்கு அஞ்சுவதோ, வெட்கப் படுவதோ அறவே இல்லை

                    புலவர்  சா  இராமாநுசம்

8 comments :

  1. வணக்கம் !

    சிறப்பான நற் கருத்து பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
  2. அருமையான கருத்துக்கள் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  3. கடுகு போல் சிறுத்த துணுக்குதான் என்றாலும் ,வீட்டையும் ,நாட்டையும் பற்றி சிந்திக்க வைக்கும் காரமான துணுக்குகள் !
    த ம 4

    ReplyDelete
  4. அருமையான கருத்துகள் ஐயா அனைவரும் உணரக்கூடிய உண்மைகள்.
    தமிழ் மணம் 5
    ஐயா எனது டேஷ்போர்டில் வரவில்லையே இந்த பதிவு ஏன் ?

    ReplyDelete
  5. அரசியல் வாதிகளின் சொல் வாக்கு கேட்கவும் செல்வாக்கு நாளுக்கு நாள் கூடவும், கண்டேதான் மதத்தின் பேராலும், சாதி , இன, என பல்வேறு வகையிலும் ஆளுக்கு ஆள் , நாளுக்கு நாள் கட்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன! இது எங்கு போய் முடியுமோ!!!?
    உண்மைதான் அய்யா. இந்த நிலை மாறவேண்டும். மாறும்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...