Saturday, May 23, 2015

துடிப்பது இழந்த தோணியென-வாழ்வைத் தொலைத்தவன் இருப்பதா!? கோழையென!?



எண்ணி எண்ணிப் பார்க்கின்றேன் –வீணில்
இதயத்தில் சுமையே சேர்க்கின்றேன்!
கண்ணியம் அறவே காணவில்லை-பெற்ற
கடனை மறுக்க நாணவில்லை!
புண்ணியம் பாவம் பார்ப்தெவர்?- பெரும்
பொருளைத் தேடவே முயலாதவர்!
மண்ணிலே பிழைக்கத் தெரியாதவர்-என்றே
மக்கள் நினைப்பதை அறியாதவர்!


குடிப்பதும் பெருமை ஆயிற்றாம் –என்ற
கொடுமை நிலையாய் போயிற்றாம்!
படிப்பதும் விற்பனைப் பொருளாகும்-வசதி
படைத்தவர் இன்றெனில் இருளாகும்!
வெடிப்பது ஏழைகள் நெஞ்சம்தான் –ஏற்ற
விலைதரும் எவர்க்கும் மஞ்சம்தான் !
துடிப்பது இழந்த தோணியென-வாழ்வைத்
தொலைத்தவன் இருப்பதா!? கோழையென!?

புலவர் சா இராமாநுசம்

17 comments :

  1. அருமையான தன்னம்பிக்கை தரும் கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    கவிதையின் வரிகள் மிக அழகு இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி. த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வரிகளில் இன்றைய உண்மைகள் ஐயா...

    ReplyDelete
  4. இன்றைய யதார்த்த நிலை ஐயா
    தம +1

    ReplyDelete
  5. //குடிப்பதும் பெருமை ஆயிற்றாம் –என்ற
    கொடுமை நிலையாய் போயிற்றாம்!
    படிப்பதும் விற்பனைப் பொருளாகும்-வசதி
    படைத்தவர் இன்றெனில் இருளாகும்!//

    காலத்துக்கு ஏற்ற வரிகள் அய்யா!

    தொடர்கிறேன்.
    த ம 5

    ReplyDelete
  6. #துடிப்பது இழந்த தோணியென#
    துடிப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தும் தோணியை நினைவு படுத்துவதும் பொருத்தமே !

    ReplyDelete
  7. குடிப்பதும் பெருமை ஆயிற்றாம்
    படிப்பதும் விற்பனைப் பொருளாம்
    வெடிப்பது ஏழைகள் நெஞ்சம்தான்
    முடிப்பது எவர் கதையைத் தான்...
    எப்ப தான் மாறும் இந்த நிலை!

    ReplyDelete
  8. நம்பிக்கையான கருத்துகள் அடங்கிய கவிதை ஐயா...
    தமிழ் மணத்தில் நுழைக்க - 7

    ReplyDelete
  9. காலத்தின் ஜாலத்தை
    கவின்மிகு வரிகளால்
    கவர்ந்து சென்ற
    கவிதை அய்யா!

    சிறப்பான தன்னம்பிக்கை உற்று!

    த ம = நவரத்தினமாய் ஜொலிக்க 7

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  10. தவறுக்கு வருந்துகிறேன்!
    த ம 9
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...