Saturday, July 25, 2015

நடவாது முடங்கிட நாடாளும் மன்றம்- இப்படி, நடந்திட வழிகாட்டி ! பா .ஜ .கா அன்றும்!



நடவாது முடங்கிட நாடாளும் மன்றம்- இப்படி,
நடந்திட வழிகாட்டி ! பா .ஜ .கா அன்றும்!
கோடான கோடிபணம் வீண்செலவு ஆக –அந்த
கொடுமையே இன்றிங்கே தொடராகிப் போக!
ஓடாகி ஏழைகளே தருகின்ற வரியும்- நாளும்
உதவாது பாழானால் வயிறன்றோ எரியும்!
வாடாது வசதியாய் வாழ்கின்ற இவர்கள்—மக்கள்
வாழ்வோடு விளையாடும் குட்டிச் சுவர்கள் !


கூடியே கலைதற்கா கொடுத்தாராம் ஓட்டே –உள்ளம்
குமுறித்தான் அழுகின்றார் மக்களும் கேட்டே!
தேடியே வந்தீர்கள் தெருவெங்கும் அன்றே –ஏனோ
தினந்தோறும் அவைதன்னில் சண்டையா நன்றே!
நாடியே நல்லதைச் செய்திட வேண்டும் –மேலும்
நாடளும் மன்றத்தை நடத்திட ஈண்டும்!
( மாண்பு மிகு பிரதமர்)
மோடியே முன்னின்று முயன்றிடல் நன்றாம் –நாடு
முன்னேற செய்வதில் முக்கிய ஒன்றாம்!
நடக்குமா???

புலவர் சா இராமாநுசம்

21 comments :

  1. அரசியல்வாதிகள் அல்ல இவர்கள்! அராஜகவாதிகள்.

    ReplyDelete
  2. முன்னேற முக்கியத்தேவை இதுவே, இப்பொழுதே.

    ReplyDelete
  3. முன்னேற்றம் நடந்தால் நன்மையே... நடக்க வேண்டும்...

    ReplyDelete
  4. இது போன்றவர்களை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தது நம் தவறு! இனி மாற்றி யோசிப்போம்!

    ReplyDelete
  5. எவர் வந்தாலும் இப்படி சண்டை போடுவது தவிர வேறொன்றும் செய்வதில்லை.... :(

    ReplyDelete
  6. யாருக்குத்தான் அக்கறை இருக்கு ,இரண்டு கட்சியும் ஒண்ணுதான் !

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா
    இரமன் ஆண்டளும் இரவணன் ஆண்டளும் ஆட்சியில் நல்லது நடந்தால் சரி ஐயா.த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  8. யார் ஆண்டாலும் நமக்கு நன்மை கிடைக்கும் என்பது குதிரைக் கொம்புதான்... அருமையான கவிதை ஐயா..

    ReplyDelete
  9. ஆதங்கம் புரிகிறது என்ன செய்யமுடியும் ஐயா !அருமையான கவிதை !

    ReplyDelete
  10. "மோடியே முன்னின்று முயன்றிடல் நன்றாம் –நாடு
    முன்னேற செய்வதில் முக்கிய ஒன்றாம்!
    நடக்குமா???" என்ற கேள்விக்கு
    மோடி ஐயா பதில் தரவேண்டும்!

    ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
    கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
    https://ial2.wordpress.com/2015/07/25/70/

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...