Tuesday, May 24, 2016

நடந்தது நடந்து போக –இனியே நடப்பது நலமாய் ஆக!


நடந்தது நடந்து போக –இனியே
நடப்பது நலமாய் ஆக
அடமது துளியும் இன்றே- புதிய
ஆட்சியை நடத்திச் சென்றே
விடமது ஏறல் போன்றே –நாளும்
விலைவாசி உயரா ஒன்றே
தடமது காண வேண்டும் –ஆட்சி
தழைத்திட செய்வீர் ஈண்டும்


எதிர்கட்சி என்றால் எதையும் -உடனே
எதிர்ப்பது அல்ல அதையும்
மதிப்பது அளித்து ஆய்ந்தே-நாட்டு
மக்களின் நலமது ஓர்ந்தே!
விதிப்படி ஏற்றுக் கொண்டோ-அல்லதன்
விளைவினை விளக்கி விண்டோ
கொதிப்பது இன்றி அவையை-இருவரும்
கொள்கையாய் நடத்தின் சுவையே!


புலவர் சா இராமாநுசம்

8 comments :

  1. அழகான வரிகள் ஐயா...!!!

    ReplyDelete
  2. பார்ப்போம் ஐயா
    நல்லாட்சி நடந்தால்
    சரி!

    ReplyDelete
  3. அருமை ஐயா! எதிர்பார்ப்புகள் நிறைவேறட்டும்!

    ReplyDelete
  4. மாற்றம் நிகழும் என்று நம்புவோம் ஐயா
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  5. நம்பி கட்டின கவிதையை ரசித்தேன் அய்யா :)

    ReplyDelete
  6. மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நல்லது நடக்கும் என்று நம்புவோம்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...