Wednesday, June 1, 2016

அன்பின் இனிய உறவுகளே-நீவீர் அளித்த மறுமொழி ஆக்கங்களே!



அன்பின் இனிய உறவுகளே-நீவீர்
அளித்த மறுமொழி ஆக்கங்களே!
என்பின் தோலென என்நெஞ்சில்-நன்றே
இணைந்திட ஓடின மனஅஞ்சல்!
இன்பின் வழிவரு ஊக்கத்தால்-கவிதை
எழுதுவேன் இயல்பென நோக்கத்தால்!
துன்பின் தொடர்பினை அறுத்தீரே-இன்றே
துவண்டிடா வண்ணம் தடுத்தீரே!

 
புலவர் சா இராமாநுசம்

8 comments :

  1. அருமை ஐயா..இன்றல்ல என்றும் உங்கள் கவிதைகளை வாசிக்கக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. தறி அடித்த காலும், கவி படைத்த கையும் சும்மாயிருக்காதே அய்யா :)

    ReplyDelete
  3. அற்புதம்..தொடர்கிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஆஹா..... அருமை. உங்கள் மனத்திட்பம், எழுந்தீர்கள்.. தொடருங்கள் உங்கள் வலையுலகப் பணியை!

    ReplyDelete
  5. நீங்கள் தொடர்ந்து எழுதுவீர்கள். எங்களுக்கு ஊக்கம் தருவீர்கள். நாங்களும் வாசிப்போம்.

    ReplyDelete
  6. தொடருங்கள் ஐயா! தொடர்கிறோம்!

    ReplyDelete
  7. இம்மாதிரி எழுதுவது உங்கள் அன்பை பண்பைக் காட்டுகிறது வாழ்த்துகள்

    ReplyDelete
  8. முடிந்ததை எழுதுங்கள் ஐயா காத்திருக்கின்றோம் படிப்பதற்கு..
    தமிழ் மணம் 4

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...