Sunday, July 3, 2016

வலையைக் கொண்டே தினந்தோறும்-தன் வாழ்வை நடத்திடக் கடலோரம்!


வலையைக் கொண்டே தினந்தோறும்-தன்
     வாழ்வை நடத்திடக் கடலோரம்
அலையைத் தாண்டிச் செல்கின்றான்-மீனவன்
    அல்லல் பட்டே சாகின்றான்!
இலையே தடுத்திடும் எண்ணமே-ஆளும்
     இரண்டு அரசுக்கும் திண்ணமே
நிலையா! முறையா? சொல்வீரே-எனில்
     நீங்கா கறையே கொள்வீரே!

புலவர்  சா  இராமாநுசம்

9 comments :

  1. மெத்தனப்போக்கு இன்னும் எவ்வளவு நாளைக்கோ?

    ReplyDelete
  2. நல்ல காலம் பிறக்கும்.

    ReplyDelete
  3. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை! காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

    ReplyDelete
  4. ஆட்சிகள் மாறினாலும் துயரக் காட்சிகள் மாறவில்லையே :)

    ReplyDelete
  5. என்று தீறும் இந்த துயரம்
    த.ம. 4

    ReplyDelete
  6. அருமையான தகவல்

    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    ReplyDelete
  7. விரைவில் நல்லது நடக்கட்டும்....

    ReplyDelete
  8. நிலைமை மாற வேண்டும் ஐயா

    ReplyDelete
  9. ஐயா,

    அலைகள் ஓய்ந்தால்தான் இந்த அவலங்கள் ஓயுமோ என்னவோ? மனக்குமுறலின் அருமையான வெளிப்பாடு.

    கோ

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...