Wednesday, October 19, 2016

என் பிறந்தநாள் இன்று! வாழ்த்துங்கள் உறவுகளே!



உறவுகளே! வணக்கம்
இன்று என் பிறந்தநாள்! நேற்றோடு எண்பத்து மூன்று முடிந்து ,இன்று எண்பத்து நான்கு தொடங்குகிறது! வலைத்தள
நண்பர்களும் முகநூல் அன்பர்களும்தான் என்னை வாழ வைக்கும்
தெய்வங்கள்! வாழ்த்துங்கள்! நான் வாழும் வரை உங்களை மறவேன்!
அன்பன், புலவர் சா இராமாநுசம்

20 comments :

  1. பெருமதிப்பிற்குரிய அய்யா, வணக்கம்.
    தங்களின் எண்பத்து நான்காம் வயதில் அடியெடுத்து வைக்கும் தங்களின் உடல்நலம் இன்றினும் வலுமிக்கதாய் நூறாண்டு வாழ்ந்திட என் பணிவான வாழ்த்துகள் அய்யா.
    “வலைத்தள நண்பர்களும் முகநூல் அன்பர்களும்தான் என்னை வாழ வைக்கும்தெய்வங்கள்!” என்பது, தாங்கள் “பணியுமாம் என்றும் பெருமை” என்னும் குறள்வழி வாழ்பவர் என்பதையே காட்டுகிறது. தாங்கள்தான் என்னைப் போலும் (61) நடுத்தர வயதினர்க்கும்(?) எண்ணற்ற இளைய பதிவர்களுக்கும் முன்னோடியாக இருந்து வழிகாட்டி உற்சாகமூட்டி வருகிறீர்கள். இன்னும் பல்லாண்டு வாழ இனிய வாழ்த்துகள் அய்யா. வணங்கி வாழ்த்துகிறேன். தங்கள் பணிகள் தொடர்க! தொடர்வோம்!

    ReplyDelete
  2. நன்றி!தம்பி!

    ReplyDelete
  3. மதிப்பிற்குரிய புலவர் ஐயா அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! தாங்கள் பல்லாண்டு வளமோடும்,நலமோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. புலவர் ஐயாவுக்கு
    உலகில் நீடூழி வழ
    அகவை 84 ஆவது
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. இப்பாதுதான் பதுக்கோட்டையில் உங்களைச் சந்தித்தது போல் இருக்கிறது, அதற்குள் ஓர் ஆண்டு ஓடி விட்டதே. நலமுடன் வாழப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  6. வாழ்த்த வயதில்லை ,வணங்குகிறேன் அய்யா :)

    ReplyDelete
  7. இன்றைக்கும் அன்றைய தமிழ் உணர்வோடு மரபுக் கவிதைகள் படைத்திடும் புலவர் அய்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. வணங்குகிறேன் ஐயா. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. புலவர் அய்யா நீடுழி இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்த எனக்கு வயதில்லை என்பதால் வணங்குகிறேன்! இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்!
    த ம 4

    ReplyDelete
  10. ஐயா வணக்கம் புதுக் கோட்டையில் உங்களை சந்தித்தது பசுமையாக நினைவில் இருக்கிறதுவயது என்பது ஒரு குறியீடே அது உங்களுக்கும் என்னைவிட நன்கு தெரிந்திருக்கும். நான் சென்னை வந்திருந்த போது உங்களை உங்கள் இல்லத்தில் சந்திக்க விரும்பினேன் கை கூடவில்லை. என் எழுத்துகளுக்கு உற்சாகம் கொடுத்து ஊக்கப்படுத்தியவர் நீங்கள்கவிதை என்று நினைத்து நான் ஏதோ எழுதப்போக புலவன் நான் சொல்கிறேன் நீங்கள் எழுதுவதும் கவிதைதான் என்று பின்னூட்டமிட்டு ஊக்குவித்தவர் மறக்க முடியுமா நல்ல ஆரோக்கியத்துடன் நெடுநாள் வாழ்ந்து வழிகாட்டுவீர்கள் என்னும் நம்பிக்கையில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறேன்

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா வாழ்த்த வயதின்றி வணங்குகிறேன் உம்மை வாழ்க நலம்
    த.ம.3

    ReplyDelete
  12. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஐயா. மரபில் பல கவிதைகள் மென்மேலும் படைக்க, வல்லானின் அருள்பெற்று நீடு வாழ்கவென‌ வாழ்த்தி வணங்குகிறேன்.

    ReplyDelete
  13. நன் நாளில் வணங்கி மகிழ்கிறேன் அய்யா

    ReplyDelete
  14. தங்களின் பிறந்த நாளில் தங்களை வணங்குகிறேன் ஐயா. தங்களைப் போன்றோரிடமிருநது நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டியன அதிகம் உள்ளன. இந்த நன்னாளில் தாங்கள் எல்லாம் செல்வமும் பெற்று நலமுடன் வாழ மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துககொள்கிறேன் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...