Saturday, January 14, 2017

புத்தாண்டு புதுப்பானை பொங்கல் இங்கே-அதில் புத்தரிசி போடுதற்கு வழிதான் எங்கே?



புத்தாண்டு புதுப்பானை பொங்கல் இங்கே-அதில்
புத்தரிசி போடுதற்கு வழிதான் எங்கே
சத்தான நீரின்றி நாடு முழுதும்-பயிர்
சாவியே! உழவன்தன் குடும்பம் அழுதும்
நித்திரை கலையாத அரசுகளே ஆள-அந்த
நிலைகண்டு தாளாத பல்லுயிர் மாள
இத்தரை தன்னில் நாம்காணும் காட்சி-ஏக
இந்தியா என்பதின் மாண்புறு மாட்சி!


புலவர் சா இராமாநுசம்

10 comments :

  1. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நான்கு கால் செல்லங்களுக்கு
    நான்கு கால் செல்வங்களுக்கு
    நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
    பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
    பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
    தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...