Friday, March 10, 2017

சிதறுதேங்காய் ஆனதய்ய அண்ணாதிமுகா!



சிதறுதேங்காய் ஆனதய்ய அண்ணாதிமுகா-ஒன்று
சேரவழி ஏதுமில்லை அண்ணாதிமுகா
உதிறிபூவாய் போனதய்யா அண்ணாதிமுகா-பானை
உடைந்தஓடாய் கிடக்குதய்யா அண்ணாதிமுகா
பதிரேநெல்லில் கலந்ததுபோல் அண்ணாதிமுகா-காற்றில்
பறக்கும்நிலை கண்டதய்யா அண்ணாதிமுகா
எதிரியின்றி அழிவதுதான் அண்ணாதிமுகா-மீண்டு
எழுவதற்று வாய்ப்பில்லா அண்ணாதிமுகா!


புலவர் சா இராமாநுசம்

9 comments :

  1. உண்மையை அழகாக சொன்னீர்கள் ஐயா

    ReplyDelete
  2. எல்லோரும் நினைப்பதுதான் ஆனால் இது அரசியல் கட்சி. பூதாகாரமாய் வெளிவரலாம்

    ReplyDelete
  3. கட்சியின் தியாகிகள் ஓரம் கட்டப் பட்டால், சிதறு தேங்காய் ஆகத்தானே செய்யும் :)

    ReplyDelete
  4. இனி அனைத்தும் சிரமம் தான்...

    ReplyDelete
  5. கட்சி அழிஞ்சா என்னங்க? ஆறு தலைமுறைக்கு சொத்து இருக்குல்ல? தொண்டர்கள் தான் பாவம்!

    ReplyDelete
  6. முடிந்ததய்யா அவர்களின் ஆட்டம்....

    ReplyDelete
  7. அரசியலில் இதுவெல்லாம் சகஜமய்யா.

    ReplyDelete
  8. கட்சிகள் சில சமயங்களில் வளரலாம் அல்லது அழியலாம். அது முக்கியமல்ல ஆனால் சமுகம் வளர்கிறதா என்று மட்டுமே நாம் நோக்க வேண்டும்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...