Saturday, March 11, 2017

மகளிர்க்கு மகளிர் தின வேண்டுகோள் இட ஒதிக்கிடு!



மகளிர்க்கு மகளிர் தின வேண்டுகோள்
இட ஒதிக்கிடு!

பெண்களே ஒன்று கூடுங்கள்
பேசியே முடிவைத் தேடுங்கள்
ஆண்களை நம்பின் மோசமே
அடைவீர் மேலும் நாசமே


விரைவில் உமக்கெனத் தனிக்கட்சி
விளைந்தால் மாறும் இக்காட்சி
குறையில் அதனைச் செய்வீரே
கொடுமை நீங்கும் உய்வீரே

சாதி வேண்டாம் உம்மிடையே
சமயம் வேண்டாம் உம்மிடையே
பீதி வேண்டாம் உம்மிடையே
பிரிவினை வேண்டாம் உம்மிடையே

நீதி கேட்டே வருகின்றீர்
நியாயம் கேட்டே வருகின்றீர்
வீதியில் இறங்கி நில்லுங்கள்
வெற்றியே முடிவாய்க் கொள்ளுங்கள்

புலவர் சா இராமாநுசம்

8 comments :

  1. நல்ல விஷயம்தான். இரோம் ஷர்மிளாவுக்கு விழுந்த வாக்குகள் பெண்களின் போராட்டப் பலனைச் சொல்கின்றன. மக்களுக்கு மறதி ஜாஸ்தி.

    ReplyDelete
  2. அவர்களுக்குத்தான் தன்னில் பாதியையே இறைவன் கொடுத்திருப்பதாய்க் கதைகள் உள்ளனவே

    ReplyDelete
  3. பெண்கள் வாக்குகூட இரோம் ஷர்மிளாவுக்கு விழவில்லையே ,எப்படி ஒன்று சேருவார்கள் :)

    ReplyDelete
  4. மகளிர் நாள் நிகழ்வில்
    மகளிர் இடவொதுக்கீடா
    நல்ல தீர்வு தான்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...