Monday, March 13, 2017

நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை-பலவும் நாளும் கண்டே தொகுத்தனை!



நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை-பலவும்
நாளும் கண்டே தொகுத்தனை
ஏட்டில் கவிதை என்றேநான் -ஆய்ந்து
எழுதிடக் காண்பீர் ஒனறோதான்!

வாட்டி வதைக்கும் செய்திபல-இங்கே
வழங்கும் ஊடகம்! நாளும்சில
காட்டில் வாழும் மிருகமென-நடப்பில்
கருதிட மனிதர் பெருகபல!

வீட்டில் நடக்கும் கொடுமைகளே-எடுத்து
வெளியிட இயலா அடிமைகளே
மீட்டிட முடியா பெண்னினமே-போதை
மிதப்பொடு வாழும் ஆணினிமே!

புலவர் சா இராமாநுசம்

8 comments :

  1. நடப்பின் உண்மை ஐயா

    ReplyDelete
  2. வேதனை தரும் உண்மை அய்யா

    ReplyDelete
  3. சொல்லி மாளாத துயரம்தான் நம்மைச் சுற்றி எப்போதும் இருக்கிறது. ஆனாலும் நிலைமை மாறுவதற்கான சூசகங்களும் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆர். கே. நகர் இடைத்தேர்தல்வரை பொறுங்களேன்!
    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  4. இன்று காலையில் கூட,மதுரை முக்கிய இடத்தில் .. இரண்டு பெண்களிடமும் ,ஒரு பிளஸ் 2 மாணவனைக் குத்திக் கொன்றும் செல்போனைப் பறித்து கொண்டுச் சென்று இருக்கிறார்கள் :(

    ReplyDelete
  5. நாட்டு நடப்பும்
    வீட்டுக் கிடப்பும்
    தங்கள் பாவில்
    பொங்கி வழிகிறதே!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...