Thursday, March 16, 2017

ஊடகத்தாற் உண்மைகளை எழுத மாட்டார்-மக்களோ ஊமைகளாய் வாய்பொத்தி எதிர்ப்பு காட்டார்!



ஏடெடுத்தேன் ஏதேனும் எழுத எண்ணி- ஆனால்
இதயத்தில் எண்ணத்தில் குழப்பம் பண்ணி!
நாடகத்தில் காணுகின்ற காட்சி போன்றே-நாட்டில்
நடக்கின்ற அவலங்கள பலவும் தோன்ற!
காடகத்தில் வாழ்கின்ற உணர்வே பெற்றேன்-மாறும்
காலம்வரல் கானல்நீர்! அறிய லுற்றேன்!
ஊடகத்தாற் உண்மைகளை எழுத மாட்டார்-மக்களோ
ஊமைகளாய் வாய்பொத்தி எதிர்ப்பு காட்டார்!


புலவர் சா இராமாநுசம்

7 comments :

  1. இவர்களுக்கு வியாபாரமே குறிக்கோள் ஐயா

    ReplyDelete
  2. இவர்களுக்கு வியாபாரமே குறிக்கோள் ஐயா

    ReplyDelete
  3. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?ஆர்கே நகர் தேர்தல் முடிவு ,முடிவு கட்டும் அய்யா :)

    ReplyDelete
  4. கானகத்தில் கூட நிம்மதியான வாழ்வு கிடைக்கும் - மனிதன் தன் சுயநலத்துக்கு அதையும் முற்றிலும் அழிக்கும்வரை!

    ReplyDelete
  5. விரைவில் நல்லதொரு தீர்வு வரும் ஐயா...

    ReplyDelete
  6. நல்லது நடந்திட காலம் வருமென காத்திருப்போம்.

    ReplyDelete
  7. "ஊடகத்தாற் உண்மைகளை எழுத மாட்டார்-மக்களோ
    ஊமைகளாய் வாய்பொத்தி எதிர்ப்பு காட்டார்!" என்றவாறு
    நாட்டு நிலைமை கெட்டுப் போச்சே!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...