Tuesday, March 21, 2017

கடந்த சில நாளாய் வந்த என் முகநூல் பதிவுகள்!



உறவுகளே!
கதையின் சூழ்நிலைக்கு ஏற்ப
பாடலை இயற்றியவருக்கோ.அதனை பாடியவருக்கோ ஏதும் இல்லாமல் ( இராயல்டி) இசையமைப்பாளருக்கே
உரியது என்பது முறையாகப் படவில்லை! சம்மந்தப் பட்டவர்கள் கலந்து பேசி முடிவு காண்பதே நன்று!

கேள்வி---?
இன்று நமிழ் நாட்டில் நினைத்த வுடன் எளிமை யாக செய்யகூடிய பணி என்ன!?
பதில்----
ஏதேனும் ஒரு கட்சி தொடங்குவது!

உறவுகளே! சில ஆண்டுகளாகவே தமிழக சட்டமன்றத்தில் தாக்கல்
செய்யப்படும் வரவு செலவு திட்ட அறிக்கைகள் வெறும் சடங்காக போய்விட்டது !ஆகவே மக்கள் அதனை பற்றி
அதிகம் கவலைப்படுவதில்லை !இவ்வாண்டும் அதே நிலைதான்

உறவுகளே!
திடீர் தீபாக்களும், திடீர் கட்சிகளும் தோன்றி வலம் வரும் அளவுக்கு,தமிழக அரசியல் தரம் தாழ்ந்த நிலைக்கு போயுள்ளது கண்டு வெட்கப் படுவதா! வேதனைப் படுவதா!? யாரை நோவது!

எத்தனைதான் முயன்றாலும் செயலலிதாவின் மர்ம மரண
உண்மைகள் வெளிவரப்போதில்லை ! காரணம்
அதில் மத்திய அரசும் ஓரளவு சம்பந்தப் பட்டுள்ளது!

நடப்பது நடக்கட்டும். நாம் நம் கடமையைச் செய்வோம் என்று
நாளும் பணியாற்றுவது தான் ஒருவருக்கு அழகு! அது மட்டுமல்ல அறிவும்
ஆகும்

புலவர்  சா  இராமாநுசம்

7 comments :

  1. அதில் மத்திய அரசு பந்தப்பட்டுள்ளது உண்மை ஐயா

    ReplyDelete
  2. 'ஏ'மாற்றம் மட்டு'மே'
    மாறாதது 'வோவ்?.,

    ReplyDelete
  3. எல்லோரும் சேர்ந்து மண் அள்ளிப் போட்டு விட்டார்கள் :)

    ReplyDelete
  4. பிரச்னைகள் ஓய்வதில்லை!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...