Wednesday, March 22, 2017

விருந்தென வந்தாய் தமிழ் மணமே-போற்றி விளம்பினேன் நன்றியும் தமிழ் மணமே!







வருந்தி எழுதினேன் தமிழ்  மணமே—முறையாய்
   வாரா நிலையைத்  தமிழ்  மணமே
திருந்தி  வரவும் கண்டு  விட்டேன்-நன்றி
   தெரிவிக்க  கவிதையும் விண்டு விட்டேன்
மருந்தே ஆகிட  உண்டு  விட்டேன்-மனதின்
   மகி.ழ்வினை இங்கே சொல்லி  விட்டேன்
விருந்தென  வந்தாய்  தமிழ்  மணமே-போற்றி
   விளம்பினேன் நன்றியும் தமிழ்  மணமே

புலவர்  சா  இராமாநுசம்

5 comments :

  1. நன்றிக்கவிதை நன்றி

    ReplyDelete
  2. உடனே நன்றி சொல்லும் பண்பு பாராட்டத்தக்கது.

    ReplyDelete
  3. போற்றிப் பாடும் அளவுக்கு, முன்பு போல் தமிழ்மணம் இன்னும் சரியாகவில்லையே அய்யா :)

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...