Showing posts with label நன்றி அறிவிப்பு கவிதை. Show all posts
Showing posts with label நன்றி அறிவிப்பு கவிதை. Show all posts

Tuesday, July 25, 2017

கானில் உயரும் மரம்போல-உந்தன் கருணை எனக்கே உரம்போல!





நானும் தந்திடும்  தொல்லைகள-ஏற்று
 நலம்தரும் உனக்கோர் எல்லையில
தேனும் இனிப்பதே  அதன்குணமே-நன்றி
  தெரிவித்தேன் வாழ்க  தமிழ்மணமே
வானும் கடலும்  உள்ளவரை-நீயும்
 வளர வேண்டுதல்  எந்தனுரை
கானில்  உயரும்  மரம்போல-உந்தன்
  கருணை  எனக்கே  உரம்போல

புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, March 22, 2017

விருந்தென வந்தாய் தமிழ் மணமே-போற்றி விளம்பினேன் நன்றியும் தமிழ் மணமே!







வருந்தி எழுதினேன் தமிழ்  மணமே—முறையாய்
   வாரா நிலையைத்  தமிழ்  மணமே
திருந்தி  வரவும் கண்டு  விட்டேன்-நன்றி
   தெரிவிக்க  கவிதையும் விண்டு விட்டேன்
மருந்தே ஆகிட  உண்டு  விட்டேன்-மனதின்
   மகி.ழ்வினை இங்கே சொல்லி  விட்டேன்
விருந்தென  வந்தாய்  தமிழ்  மணமே-போற்றி
   விளம்பினேன் நன்றியும் தமிழ்  மணமே

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...