Monday, June 5, 2017

சென்னநகர் முழுவதுமே குடிநீர்ப் பஞ்சம் செப்புதற்கு இயலாது கொதிக்கும் நெஞ்சம்



சென்னநகர் முழுவதுமே குடிநீர்ப் பஞ்சம்
செப்புதற்கு இயலாது கொதிக்கும் நெஞ்சம்
அன்னைகுலம் தெருவெங்கும் குடத்தைத் தூக்கி
அலைகின்றார் பொங்கிவரும் கண்ணீர் தேக்கி
என்னவெனப் பார்காத ஆட்சி இங்கே
இருக்கின்றார் அமைச்சர்பலர் தீர்வு எங்கே
சின்னமது இரட்டையிலை பெறவே போட்டி
செய்கின்றார் சிந்தைதனில் திட்டம் தீட்டி


புலவர் சா இராமாநுசம்

13 comments :

  1. அவர்களுக்கு மக்களைப்பற்றி நிளைக்க நேரமில்லை ஐயா
    த.ம. 1

    ReplyDelete
  2. சென்னை தண்ணியில்லா காட்டு லிஸ்ட்ல சேர்ந்திடுச்சோ

    ReplyDelete
  3. இலை வளர வேண்டுமென்றால் தண்ணீர் அவசியம் தேவை என்பதை உணராதிருக்கின்றனர்!

    த.ம. + 1

    ReplyDelete
  4. சம்பந்தப்பட்டவங்க உணருவாங்களா

    ReplyDelete
  5. சிறுமதி கொண்ட சிலரின் சொரூபம் கண்டு?!
    வெகுமதி கண்ட மகிழ்வில் திளைக்கின்றார்ஜ அவர் தமை அறியா ஜடமென்று அரியாசன கனவில் உள

    ReplyDelete
  6. கண் கலங்கச் செய்யும் கனமான கவிதை வரிகள்.

    ReplyDelete
  7. பல ஊர்களிலும் இதே நிலைமை தான் அய்யா :)

    ReplyDelete
  8. வந்தா வெள்ளம், இல்லைன்னா பஞ்சம். நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுகிற அரசு இல்லை. வேதனை தான் மிஞ்சுகிறது

    ReplyDelete
  9. சாதனைகள் வெறும் வேதனைகள்தான்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...