Wednesday, July 26, 2017

நீங்காது மனதினிலே அலைபோல் மோத!





நீங்காது மனதினிலே அலைபோல் மோத
நிலையின்றி பல்வகையும் நினைவில் ஓத
தூங்காத விழியிரண்டும் துணையாய் நின்றே
தொலையாத இரவுதனை தொலைத்தேன் நன்றே
தாங்காது தவிப்பதும் எத்தனை நாளோ
தடமறியா என்நெஞ்சை அறுக்கும் வாளோ
ஏங்காது வாழ்கின்ற நாளும் வருமா
எல்லையின்றி ஓர்முடிவை விரைவில் தருமா


புலவர் சா இராமாநுசம்

8 comments :

  1. தனிமை கொடுமைதான் ஐயா எல்லாம் கடந்து போகும்.
    த.ம.பிறகு கணினியில்.
    இரண்டு தினமாக கணினி திறக்க நேரமில்லை ஐயா.

    ReplyDelete
  2. தனிமையைத் தவிர்த்திட வழி வகை காணுங்கள் அய்யா :)

    ReplyDelete
  3. உறவுகளே ஓட்டுப் போட்டால் தவறாது எண்ணைக் குறிப்பிடவும் அதுபோதுதான் யார் ஓட்டு பதிவாக வில்லையென அறிய இயலும்!

    ReplyDelete
  4. கலக்கம் வேண்டாம் ஐயா. எல்லாம் சரியாகும்.

    த.ம. இரண்டாம் வாக்கு.

    ReplyDelete

  5. முடிவு பின்னர் வரட்டும். தொல்லையில்லாத வாழ்வு போரடிக்கும் ஐயா....!!

    தமிழ்மணம் மூன்றாவது வாக்கு நான்!

    ReplyDelete
  6. விதி வலியது.

    த.ம 4

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...