Friday, July 28, 2017

என் முகநூலில் வந்தவை!




மரணம் நம்மைத் தேடிவர-கேட்ட
மக்கள் திரண்டு ஓடிவர
வரமே பெற்று வாழ்வோமே-அன்னார்
வருந்திட புகழ்தனில் சூழ்வோமே
தரமே திலைத்திட நற்பெயரே-எடுக்க
தருவோம் நம்முடை இவ்வுயிரை

புலவர் சா இராமாநுசம்

தற்போது தமிழக அரசின் நிலை , திருடனுக்குத் தேள்
கொட்டியது போன்றது தானே
என்ன?நான் சொல்வது சரிதானே!


திருடப்போன இடத்தில் தேள்
கொட்டினால் ஐயோ என்றா
கத்த முடியும் அதுபோலத்தான்
நம் வாழ்க்கையில் சில நிகழ்வுகள், வாய் விட்டு
சொல்ல முடியதனவாக அமைந்து விடுகிறது


இனி ,சில நாட்களுக்கு அரசியல்
பதிவுகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு
இலக்கிய இன்பம் பற்றி எழுதுகிறேன்


அன்னை வையிற்றில் உருவானோம்-எரியும்
அக்கினி தனக்கே எருவானோம்
பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
பொருளை எடுத்து போனோமா
(சொல்லுங்கள்)
 
 
 

9 comments :

  1. த ம 1
    சொன்னதெல்லாம் சரிதான் அய்யா :)

    ReplyDelete
  2. அருமை ஐயா வரட்டும் நல்கவிகள்
    த.ம.பிறகு கணினியில்

    ReplyDelete
  3. அங்கயும் இங்கயும் பிடிச்சது இதுதான்

    ReplyDelete
  4. அருமை ஐயா...த ம 6 என்று நினைக்கிறோம்...

    ReplyDelete

  5. ​அருமை. 7 வது வாக்கு என்னுது!

    ReplyDelete
  6. அரசியல் பதிவுகளால் ஆவதொன்றுமில்லை இலக்கிய இன்பமாவது துய்க்கலாமே

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...