Wednesday, August 23, 2017

ஊழலும் ஊழலும் ஒன்னாச்சி-சொன்ன ஊழல் எல்லாம் என்னாச்சி




ஊழலும் ஊழலும் ஒன்னாச்சி-சொன்ன
ஊழல் எல்லாம் என்னாச்சி
ஆழமா தோண்டிப் புதைச்சாச்சி-பதவி
ஆசையை அதன்மேல் விதைச்சாச்சி
சூழலுக் கேற்ப நடந்திடவே-டெல்லி
சொற்படி ஆட்சியும் ஓடிடவே
தோழமை ஆனது இருஅணியும்-மேலும்
தோடர்ந்திடும் ஆணைக்கு தினம்பணியும்


புலவர் சா இராமாநுசம்

20 comments :

  1. பொம்மலாட்டம் நடக்குது இங்கே ,ஆட்டுபவர்கள் மத்தியில் அங்கே :)

    ReplyDelete
  2. பேசி சரி கட்டிட்டாங்களாம்... பொன்னையன் சொன்னாரு

    ReplyDelete
    Replies
    1. மகளே! உன் வலையில் என்ன கோளாறு? திறக்க வரவில்லை!கவனிக்க!

      Delete
  3. ஆட்டு விப்பார் அவரொருவர் ஆடுகின்றார் ஐயா....
    த.ம.5

    ReplyDelete
  4. சொன்ன சொல்லை மறந்திடலாமோ.......

    ReplyDelete
  5. அரசியலில் இதெல்லாம் சகஜம் ஐயா!

    தம 8

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. ஒற்றைக் குட்டையினில் ஊறியவர்-பொய்யை
    ஓராமல் சொல்வதில் தேறியவர்
    பற்றிடத்தான் ஓருபதவி வரின் -முன்பு
    பலவாறும் சொன்னசொல் மாறியவர்
    குற்றவுணர்வென்றால் என்னவிலை-என்று
    கூசாமல் கொள்கையை வீசியவர்
    சற்றும் தயங்காமல் சாகசங்கள்-செய்யும்
    சதிகாரர் வசப்பட்டுச் சாகின்றோமே!

    ReplyDelete
  8. மக்கள் பாடு திண்டாட்டம் ! அரசியலார்க்குக் கொண்டாட்டம் !

    ReplyDelete
  9. அரசியல்வாதிகள் அடிச்சுக்குவாங்க புடிச்சுக்குவாங்க
    ஆனால் ஊழலே அவர்கள் நோக்கம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...