Thursday, August 3, 2017

அழகெனப் படுவது யாதெனில் உறவே!




அழகெனப் படுவது யாதெனில் உறவே
அகத்தின் அழகே அழியா என்றும்
செகத்தில் நம்மிடம் செப்பிட இன்றும்
இருப்பது தாமே! அறிவோம் நாமே
புறத்தில் தோன்றுவ காலப் போக்கில்
மாறியே வருமே முதுமையைத் தருமே
அகத்தின் அழகே அழியா என்றும்
இகத்தில் நமதுயிர் ஏகும் வரையில்


புலவர் சா இராமாநுசம்

18 comments :

  1. சரியாக சொன்னீர்கள் அகத்தின் அழகே இறுதிவரை.

    ReplyDelete
  2. அருமை ஐயா அழகான வரிகள்
    த.ம.பிறகு

    ReplyDelete
  3. முகத்தில் தெரியுமே அகத்தின் அழகு :)

    ReplyDelete
    Replies
    1. த ம வாக்கு சேர்ந்து விட்டது அய்யா :)

      Delete
  4. முத்தான கவிதையை மூன்றாவது வாக்கிட்டு ரசித்துச் செல்கிறேன்.

    ReplyDelete
  5. அகத்தின் அழகே அழியா என்றும்
    இகத்தில் நமதுயிர் ஏகும் வரையில்//

    உண்மை.

    ReplyDelete
  6. ஆனால் அதை உணர ஆண்டுகள் பிடிக்கலாம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...