Saturday, September 16, 2017

நீக்கினார் நீக்கினார் செய்தி ஒன்றே-இங்கே நிலையாக ஊடகங்கள் தரவும் இன்றே!



நீக்கினார் நீக்கினார் செய்தி ஒன்றே-இங்கே
நிலையாக ஊடகங்கள் தரவும் இன்றே
நோக்கினால் தலைதானே சற்றும் நன்றே-உள்ளம்
நோகாத நிலைதானே வருதல் என்றே
தேக்கினார் பணிமுற்றும் முடங்கிப் போக-ஆள்வோர்
தினச்சண்டை ஏட்டிக்கி போட்டி யாக
ஆக்கினார் ஆட்சியை நாசம் அந்தோ-மக்கள்
அல்லாட விலையேற்றம் உயரும் அந்தோ


புலவர் சா இராமாநுசம்

8 comments :

  1. எல்லாம் ஆளுங்கட்சியின் பவர்தான் ஐயா.
    ஐந்து வருடம் கடந்தும்கூட மக்களுக்கு கேட்கும் புத்தி இல்லை என்ன செய்வது ?
    த.ம.1

    ReplyDelete
  2. இந்த நாடகம் அந்த மேடையில் கடைசி வாரம் :)

    ReplyDelete
  3. இதற்கு நாம் தான் காரணம் ஐயா! வாக்கை விற்ற நம் மக்கள் அதன் பலனை அனுபவித்துத்தானே ஆகவேண்டும்.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா !


    காமராசர் கொண்ட கனவழித்த தேசம்
    மக்களை நினைக்க வாய்ப்பில்லை......

    தம +1

    ReplyDelete
  5. மக்களை மறந்தே போய்விட்டார்கள் ஐயா

    ReplyDelete
  6. தம்மையே நினைக்கிறார்கள். மக்களை எப்போது நினைப்பார்களோ?

    ReplyDelete
  7. உச்சகட்ட காட்சி நடக்குது அய்யா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...