Monday, September 25, 2017

ஆழ்துளை கிணரும் வற்றியதே-எம்மை அளவில் துயரது பற்றியதே!



ஆழ்துளை கிணரும் வற்றியதே-எம்மை
அளவில் துயரது பற்றியதே
வாழ்வது எவ்வண் வான்மழையே-உடன்
வாராது போவது ஏன்மழையே
வீழ்வது மழைத்துளி நீரன்றே –பொங்கி
வீழுவது இருவிழி நீரொன்றே
சூழ்வது உண்டே! மழைமேகம் –கலையும்
சுடர்கண்ட பனியாம் அதன்வேகம்


புலவர் சா இராமாநுசம்

6 comments :

  1. ஆற்றில் சுரண்ட இங்கே வறண்டுவிட்டது ஐயா.

    ReplyDelete
  2. பக்கத்து மாநிலங்களில் கூட பெய்கிறது ,நம் ஆட்களின் சுரண்டலைக் கண்டு பின் வாங்குவது போலிருக்கே அய்யா :)

    ReplyDelete
  3. காலம் மாறும் ஐயா.

    ReplyDelete
  4. இந்த ஆண்டு நல்ல மழை இருக்கும் என வானிலை நிபுணர்கள் சொல்கிறார்கள். நம்பிக்கையுடன் இருப்போம் ஐயா!

    ReplyDelete
  5. சென்னையில் நிறைய இடங்களில் இந்தப் பிரச்னை... சீக்கிரம் மாறவேண்டும்.

    தம 4ம் வாக்கு.

    ReplyDelete
  6. நான் சென்னை வந்தால் மழை பெய்யும் ராசி உண்டு

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...