Thursday, September 7, 2017

என்னென்னவோ நடக்குது ஏதேதோ நடக்குது ஒன்னுமே புரியவில்லை கோவிந்தா




என்னென்னவோ நடக்குது ஏதேதோ நடக்குது
ஒன்னுமே புரியவில்லை கோவிந்தா—அதனால்
உளம்வருந்தி எழுதிவிட்டேன்! ! பாவிந்தா
சொன்னதென! மறந்துவிட !சுயநலமே ஓங்கிவிட
மன்னரென ஆளுகின்றார் கோவிந்தா- நானும்
மனமொடிந்து எழுதிவிட்ட பாவிந்தா
பின்னிருந்து தள்ளிவிட இரண்டுமே இணந்துவிட
பேச்சுமூச்சு ஏதுமில்லை கோவிந்தா உள்ளுக்குள்
புகையநெருப் பனையவில்லை பாவிந்தா
போகப்போக தெரியவரும் போலித்தனம் அறியவரும்
புல்லர்வேடம் புரியவரும் கோவிந்தா-காலம்
புலப்படுத்தும் காத்திருக்க பாவிந்தா


புலவர் சா இராமாநுசம்

12 comments :

  1. முகநூலில் வாசித்தேன்... இப்போ இங்கும்...
    கேவலமான அரசியல் சூழலில் நாம் இப்போது ஐயா...
    காலம் புலப்படுத்தும்.... காத்திருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. எதற்காக காத்திருப்பு? பொற்காலம் வரும் என்ற கனவோ?

      Delete
  2. எனக்கும் புரியவில்லை.
    தம முதலாம் வாக்கு.

    ReplyDelete
  3. இந்த அரசியல் வியாதிகளால் அனிதாவின் உயிர் போய்விட்டதே அய்யா :(

    ReplyDelete
  4. மக்களின் நிலைப்பாடு கோவிந்தாதான் ஐயா.
    த.ம. இட இயலாத நிலை மன்னிக்கவும்.

    ReplyDelete
  5. காலம் புலபடுத்தும்.

    ReplyDelete
  6. நடப்பவை நடந்தே தீரும்.

    ReplyDelete
  7. என்னமோ நடக்குது... மர்மமாய் இருக்குது! வேறென்ன சொல்ல!

    த.ம. மூன்றாம் வாக்கு.

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா !

    மனம்போன போக்கில் மனிதம் மாற்றங்களை மாற்றியபடி.....



    ReplyDelete
  9. சுயநலம்தான் இப்போது எங்கும்.

    ReplyDelete
  10. என்னவோ நடந்து விட்டதால் ஓட்டு போட வழியில்லை அய்யா...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...