Sunday, December 24, 2017

சின்னத்தை வைத்துவெற்றி பெறுவோம் என்றே-எண்ணி செப்பியவர் வாயினிலே மண்ணாம் இன்றே



சின்னத்தை வைத்துவெற்றி பெறுவோம் என்றே-எண்ணி
செப்பியவர் வாயினிலே மண்ணாம் இன்றே
கன்னத்தில் கைவைத்து கவலைப் படவும்-அந்தோ
கலங்கிடுவோர் உள்ளத்தை ஏக்கம் தொடவும்
எண்ணத்தை இனியேனும் மாற்றிக் கொள்ளல்-எதிர்நாள்
ஏற்றதென கட்சிகளே அனைத்தும் உள்ளல்
திண்ணமுற காட்டுகின்ற காட்சி தானே-இடைத்
தேர்தலிலே ஆர்கேநகர் சாட்சி தானே


புலவர் சா இராமாநுசம்

11 comments :

  1. சின்னத்தை வைத்து வெற்றி பெறுவதா? பணம் ஒன்றே போதுமே...

    ReplyDelete
  2. பண பலம் மட்டுமே வெற்றி பெறும் அவலம். என்ன சொல்ல.

    ReplyDelete
  3. ஆர்.கே.நகர் மக்களின் அறிவு வளர்ச்சி திகைக்க வைக்கிறது ?
    த.ம.பிறகு

    ReplyDelete
  4. பணம் பாதாளம்வரி பாயும் அறிவீர் நீங்களே

    ReplyDelete
  5. இதுதான் தற்போதைய அரசியல் நிலை.

    ReplyDelete
  6. இரட்டை இலையை வைத்து இனி அரசியல் செய்ய முடியாது என்பதனை அருமையாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  7. மக்கள் நேர்மையாய் ஆகிவிட்டார்கள் கை நீட்டிய பின் பேச்சு மாறக்கூடாது என்று

    ReplyDelete
  8. பணம் வாங்கி வாக்குப் போடும் நிலை
    மாறாத வரைக்கும் தமிழகம் முன்னேறாதே!
    இது யார் விட்ட தவறு? - ஆண்டவா
    நீயே பதில் கூறு!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...