Friday, December 22, 2017

மேதினி திரளுமே அவரின் பின்னால்-நாளும் மேன்மேலும் வளருமே புகழும் தன்னால்!

ஏதிலார் குற்றத்தை ஆய்தல் போல -வாழ்வில்
எவனொருவன் தன்குற்றம் ஆய்ந்து சால
தீதிலா வாழ்வுதனை நடத்தல் நன்றாம்-அதுவே
திருக்குறள் சொல்லும் நீதி ஒன்றாம்
ஓதிய வள்ளுவன் உரையைக் கொண்டே-தமது
ஊர்மெச்சி பாராட்ட செய்யின் தொண்டே
மேதினி திரளுமே அவரின் பின்னால்-நாளும்
மேன்மேலும் வளருமே புகழும் தன்னால்


புலவர் சா இராமாநுசம்

8 comments :

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...