உறவே இன்றே உரைப்பது ஒன்றே
அறிவெனப் படுவது யாதென அறிந்தே
ஓதிய வள்ளுவன் கருத்தினைத் தெரிந்தே
ஒருசில இங்கே உரைத்திட லானேன்
அழிவினை நீக்கி பகைவரைத் தடுத்தும்
மனதினை அடக்கி எப்பொருள் ஆயினும்
எவரதைச் சொல்லினும் உண்மை உணர்ந்தும்
சான்றோர் நட்பொடு உலகுடன் ஒத்தும்
பின்வரல் உணரந்து அஞ்சுவ அஞ்சியே
நடப்பதே அறிவென நவின்றார் வளுவர்
புலவர் சா இராமாநுசம

