Showing posts with label ஆசிரியர் பணி அறப்பணி ஆனால் ஒருக்கமற்ற சிலரால் வந்தது சீர்கேடு. Show all posts
Showing posts with label ஆசிரியர் பணி அறப்பணி ஆனால் ஒருக்கமற்ற சிலரால் வந்தது சீர்கேடு. Show all posts

Friday, June 5, 2015

எழுத்துதனை அறிவித்தான் இறைவன் என்றே எண்ணியதோர் காலமது இல்லை இன்றே!



எழுத்துதனை அறிவித்தான் இறைவன் என்றே
எண்ணியதோர் காலமது இல்லை இன்றே!
ஒழுக்கமின்றி அப்பணியைச் செய்வோர் சிலரால்
ஊர்தோறும் நடக்கின்ற செய்தி வரவால்!
இழுக்குமிக, ஐயகோ! பெருமை போச்சே
இதயத்தில் வேதனையே நிலையாய் ஆச்சே!
வழுக்குநிலம் ஆயிற்றாம் கல்வி இன்றே
வகுப்பறையில் ஆசிரியர் உணர்தல் நன்றே!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...