இசையுலகின் முடிசூடா மன்னராக –எம் எஸ்
இருந்தாரே !மறைந்தாரே மின்னலாக!
அசைந்தாடும் செடிகொடிகள் மயங்கிப்போக-அவர்
அமைத்திட்ட இசையாலே அமைதியாக!
திசைஎட்டும் கொடிகட்டி பரவபுகழே –காது
தித்திக்க தெவிட்டாது என்றும் திகழ!
வசையேதும் இல்லாது புனிதரவரே-இசை
வரலாற்றில் நிகராக இருப்பதெவரே!
புலவர் சா இராமாநுசம்

