Showing posts with label முகநூலும் மூன்று கவிதைகளும்!. Show all posts
Showing posts with label முகநூலும் மூன்று கவிதைகளும்!. Show all posts

Tuesday, February 21, 2017

முகநூலும் மூன்று கவிதைகளும்!

இலவுகாத்த கிளியானாய் மினியம்மா-உண்ண
இறைவன்தந்த வரம்தானே களியம்மா
உலவிடுவேன் சிங்கமென மினியம்மா-நீங்க
உரைத்தபின்னர் பற்றியது சனியம்மா
நிலவுபோல தேய்பிறையாய் மினியம்மா-கனவு
நீங்கியது விடாதினி சனியம்மா
பலவேசெய்தும் பயனில்லை மினியம்மா-வந்த
பாதையிலே பழுதுமிக சனியம்மா


புலவர் சா இராமாநுசம்


ஆளுனரே! ஆளுனரே எங்கே போறிங்க!-நீங்க
ஆளவந்த பின்நடக்கும் கூத்து பாருங்க
நளுமிங்கே நடப்பதெல்லாம் வெக்க கேடுங்க-இனியும்
நம்புதற்கு ஏதுமில்லை! முடிவு தேடுங்க!
மாளுவாங்க போருமிட்டு ! அமைதி போகுங்க-இங்கே
மக்களுக்கு வாழ்கையே துன்ப மாகுங்க!
ஆளுனரே! ஆளுனரே ஆய்ந்து பாருங்க-உண்மை
அறிந்த பின்னர் விடிவு கூறுங்க!


புலவர் சா இராமாநுசம்

எதையும் சொல்லிப் பயனில்லை
யாரையும் நொந்தும் பயனில்லை
கதையிலும் காணாத் திருப்பங்கள்
கண்டிட மக்கள் விருப்பங்கள்
புகையும் எரிமலை போன்றதுவே
பொங்கிடக் காண்பீர் தோன்றதுவே
பகையும் தீர்ப்பர் ஒருநாளே
பாரீர் விரைவிலத் திருநாளே


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...