Showing posts with label முகநூல் பதிவுகள். Show all posts
Showing posts with label முகநூல் பதிவுகள். Show all posts

Tuesday, January 2, 2018

முகநூல் பதிவுகள்!


சொல்லுதல் யாருக்கும் எளிது
ஆனால் சொல்லியவாறு செய்தல் மிகவும் அரிது

சட்ட மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற இரசினி
நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டும் அப்போது முடிவெடுக்கப் படும் என்கிறாரே! காரணம் என்ன!!?
விளக்குவாரா!!

எந்த ஒரு செயலாய் இருந்தாலும் நன்கு ஆய்ந்து அதன் பின்னே தொடங்குவது நன்று! தொடங்கிய பின்
அதனை ஆய்வு செய்தால்அதனால் இழுக்கு தான் ஏற்படும் !இது யாருக்காவும் எழுதப் பட்ட தல்ல! வள்ளுவர் வாக்கு!

எந்த செயலாய் இருந்தாலும் அதற்கேற்ற ,காலமும் இடமும்
அறிந்து செயல் பட்டால் அஞ்சாமை தவிர வேறு துணை எதுவும் தேவையில்லை வெற்றி உறுதி!

இடைத் தேர்தலில் பணநாயகம்
வெற்றி பெற்றது என்றாலும் கூட ,ஓட்டு வித்தியாசம் அதிகம் என்பதை ஆய்ந்தால் அது தினகரனுக்காப் போடப்பட்டது என்பதைவிட மக்கள் ஏதோ ஒரு மாற்றத்தை எதிர் பார்த்து போடப்பட்டுள்ளது என்றே நான்
கருதுகிறேன்!

உறவுகளே
2.G வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது! அதைப்பற்றி கருத்து எதுவும் இங்கே குறிப்பிட நான் வரவில்லை ஆனால் இன்று கோடிக் கணக்கான மக்கள் , ஏன் இன்னும் சொல்லப்போனால் நாட்டில் செல்போன் இல்லாத
மனிதரே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வளர காரனமானவர் அ .இராச என்பது குறிப்பிடத் தக்கது

புலவர்  சா  இராமாநுசம்

Sunday, October 8, 2017

முகநூல் பதிவுகள்!



அண்ணா தி மு க தற்போது
இரட்டை மாட்டு வண்டிபோல
ஆகிவிட்டது புதிய ஓட்டுனர் வந்து விட்டார்!
வண்டி இனி, எப்படி போகுமென பார்ப்போம்

இன்று தமிழ்நாட்டிலே முதல்வர் பதவிக்குத்தான் ஏகப்பட்ட
போட்டி! அடடா !பலபேர் அந்தக்
கனவிலேயே மிதக்கிறார்கள்! காரணம் அரசியலில் அமைச்சராக ,ஒரு தகுதி என்று ஏதும் இல்லை!கைநாட்டு கூட அமைச்சராகலாம்

உறவுகளே!
வரும் செய்திகளைப் பார்க்கும்
போது பி ஜே பி கட்சிக்குள் ஏதோ
குழப்பம் உள்ளது தெரிகிறது பிரதமர் மோடிக்கு
எதிராக குழு ஒன்று உருவாவதும் தெரிகிறது
விரைவில் மாற்றங்கள் வராது என்றாலும் அதற்கான வாய்ப்புகள்,அறுகுறிகள் தென்படுகின்றன!


நஞ்சுண்டவன் சாவான் என்று
சொன்னால்! நஞ்சுண்டவள்,,
சாவாளா என்று கேட்பவரை என்ன வென்று சொல்வது! அவள் மட்டுமல்ல, அவர்கள் ,அது ஆக அனத்தும் சாகும்!என்பது
தெரிந்தும் கேட்பது விதண்டா வாதம் தானே! இப்படித்தான் நாம் எழுதும் பதிவுகளில் மறுமொழியாக
சிலர் கேட்கிறார்கள்!


மைய, மாநில அரசுகள் , திட்டங்கள் தீட்டுவது நாட்டு
மக்களின் நன்மைக்கே என்பது தவறல்ல ! ஆனால் , அத்திட்டங்கள் நடைமுறையில் வெற்றியின்றி தோல்வி அடையுமானால் அதனை மாற்றிக் கொள்வதும் தவறல்ல ! அதனைஏதோ தங்கள் மானப் பிரச்சனை யா்க எண்ணுவது தான் தவறாகும்


புலவர்  சா  இராமாநுசம் 

Monday, September 18, 2017

முகநூல் பதிவுகள்

இராசவின் படுதோல்விக்கிப் பிறகாவது , பா ஜ க அரசு தமிழக
மக்களின் மன்போக்கை அறிந்து
தன்னை ,தன் போக்கை மாற்றி தமிழகத்திற்கு நல்லது
செய்து மக்கள் மனதில் இடம் பிடிக்குமா!?

உறவுகளே
நாள் தோறும் காலண்டரில் ஒரு தாளைக் கிழிக்கிறோம் யாரேனும் நினைத்துப் பார்ப்பதுண்டா
அது நம் வாழ்நாளில் ஒரு நாளைக் கிழிக்கிறோம்
எனபதை!

திட்டமிட்டு திறமையோடு எந்த
ஒரு செயலையும் செய்பவர்கள்
தாம் எண்ணியதை எண்ணியவாறே அச் செயலில்
வெற்றி பெறுவர் என்பதில் ஐயமில்லை என்பதாம்

நல்லவனா கெட்டவனா என சரிவர ஆராயாமல் ஒருவனிடம் வைக்கும் நம்பிக்கையும் , நன்கு ஆராய்ந்து நல்லவன் நம்பிக்கைகு உரியவன் என்று
அறிந்த பின்பும் அவன்பால் , ஐயம் கொள்வதும் நமக்கு
தீராத துன்பத்தையே தரும்

சமூகநீதியை நிலை நிறுத்த திமுக துணை நிற்கும்: ஆசிரியை சபரிமாலாவுக்கு ஸ்டாலின் வாக்குறுதி
--செய்தி
: முதலில் ,ஆசிரியை சபரிமாலாவுக்கு ஸ்டாலின் அ்வர்கள் தன கட்சிக்காரகள் நடத்தும் ஏதேனும் ஒரு
பள்ளியில் வேலை வாங்கித் தரட்டும்! செய்வாரா?

ஒரு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ள
இந்த காலத்தில் அனிதா தற்கொலையால் தான் செய்த
அதும் அரசுப் பள்ளி ஆசிரியை வேலையை நீட் தேர்வுக்கு எதிர்புத் தெரிவித்து இராசினாமா செய்தது
பாராட்டத் தக்கது என்றாலும் ஏற்கத் தக்கதல்ல! இன்று
ஏதோ ஒரு ஆவேசத்தில் அவர் இப்படி செய்து விட்டார்
ஆனால் காலப்போக்கில் பொருளாதார சிக்கல் வரும்போது தொல்லை படுவார் இன்று பாராட்டும் எவரும் உதவமாட்டார் !அவர் வேறு வமையில் தன் எதிர்ப்பைக்காட்டி இருக்கலாம்


புலவர்  சா  இராமாநுசம் 

Wednesday, July 13, 2016

முகநூல் பதிவுகள்!


உறவுகளே!
ஓடாத கடிகாரத்திலே மணி, பார்த்தா அது யார்தப்பு! கடிகாரத்தின் தப்பா! பார்த்தவன் தப்பா!? ஆனால் வீணாக கடிகாரத்தை குறை சொல்வார்கள், இப்படித்தான் சிலர் தம்
குறையை உணராமல் அடுத்தவர்கள் மீது சுமத்துவார்கள்

எரியும் விளக்குக்கு எண்ணை ஊற்றினால்தானே மேலும் , எரிந்து கொண்டே இருக்கும்! இல்லை யென்றால் திரியும் எரிந்து ,அவிந்து தானே போகும்! அப்படித்தான் நாம் செய்யும் பணியும் , முயற்சியும் ஆகும்! நம் கவனம் சிதறினால் அனைத்தும் பாழாகி கெட்டு விடும்!

உறவுகளே !
பாதம் பூராவும் நெருஞ்சி முள் குத்தினாலும் பாதக மில்லை! துடைத்துவிட்டு மேலே நடக்கலாம்! ஆனால் குத்தியது வேலி காத்தான் முள் என்றால் !!? அப்படியே விடமுடியுமா! அது, விடமாயிற்றே !பாதத்தை பாதுகாக்க உரிய முறையில் ஆவன செய்யத்தானே வேண்டும் !அதுபோல நம் வாழ்கையில் நாள் தோறும் பல நிகழ்வுகள் நடக்கின்றன , அவை களில் சிலவற்றை நெருஞ்சி முள்ளாக எண்ணி ஒதுக்கி விடலாம்! சில, வேலிகாத்த முள்ளா இருக்குமானால் சரிசெய்ய உரிய நடவடிக்கை உடன் எடுப்பதுதான் நன்று!

உறவுகளே!
மகளைப் பறி கொடுத்து விட்டு நொந்து நூலகிப் போன தந்தை
மகளின் ஒன்பதாம் நாள் காரியம் செய்ய சீரங்கம் சென்றால் , அங்கேயும் போய், ஊடக செய்தியாளர்கள் , அவரிடம் செய்தி சேகரிக்கவும் பேட்டிகாணவும் முயன்றது ஊடக தர்மம் தானா?

உறவுகளே!
சட்டமும் பாதுகாப்பும் எவ்வளவுதான் பலமாக அமைத்தாலும் தனி மனித ஒழுக்கம் குறையக் குறைய குற்றங்கள் கூடிக் கொண்டேதான் போகுமே தவிர குறைய வாய்பில்லை! எனவே, நாம் வாழும் சமுதாயத்தில் , தனிமனித ஒழுக்கத்தை வளர்க நாம் அனைவரும் தனது கடமையாக எண்ணி பாடுபட வேண்டும்.

உறவுகளே!
மாண்புமிகு முதல்வர் அவர்கள் இப்தார் விருந்தில் கலந்து கொள்ள, நந்தம் பாக்கம் சென்ற போது. அவர் இல்லம் விட்டு(5.40 மணி,மாலை)கிளம்பி ,நிகழ்ச்சி முடிந்து இல்லம் திரும்பிச் செல்லும் வரை, சுமார் 2, மணி நேரத்துக்கு மேல் இருபுறமும் போக்கு வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது என்ற செய்தி உண்மையா!!? இது முதலவருக்குத் தெரியுமா? தெரியாது என்றே கருதுகிறேன்! இத்தகைய செயல்கள் மக்களுக்கு வெறுப்பே ஏற்படுத்தும்! என்பது முதல்வர் அவர்களுக்கு நன்கு தெரியும்! எனவே உடன் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக் அறிவுறுத்தி. இனியும் , இவ்வாறு நடக்காமல் செய்வது மேலும் பெருமை சேர்க்கும்!

புலவர்  சா  இராமாநுசம்

Sunday, June 19, 2016

முகநூல் பதிவுகள்!


அன்பே! உன் பெயர்தான் அன்னையா!!!!?
கூவத்தையும் காவிரியையும் ஒன்றாக எண்ணி ஏற்றுக் கொள்ளும் கடல்போல, தன் ,மகனோ மகளோ நல்லவர்களோ தீயவர்களோ என்று பாராமல் ஏற்றுக் கொள்ளும் மனம் படைத்தவளே   உன்பெயர்தான் அன்னையா!!!?

ஓர் அரசு மக்களுக்குப் எப்போதும் நீதிநெறியோடு பாதுகாப்பாக இருக்கவேண்டும்! அப்படி இருந்தால், அதுவே(ஆட்சி முறை) அரசைக் காப்பாற்றும்! (குறள்கருத்து)

பணம் பத்தும் செய்யும் என்பார்கள்! அதில் ஒன்று , ஆளவும் செய்யும் என்பது புலனாகிறது

எப்படியோ, ஆளும் கட்சியும் பலமான எதிர்க் கட்சியும், என இரண்டு அணிகள் உருவாகி விட்டன ! வரவேற்போம்! ஆனால் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டு சட்ட மன்றத்தை போர்க்களமாக ஆக்காமல் சனநாயக முறைப்படி நடத்திச் செல்லுமாறு இருதரத்தாரையும், நடக்க வேண்டுகிறோம் .மேலும், இதனை மக்கள் அறிய அவை நிகழ்ச்சிகளை அப்படியே நேராக தொலைக்காட்சியில் அஞ்சல் செய்தால் , தவறு செய்வது யாரென்று மக்களும் அறிவர்! செய்வீர்களா!

ஊழல் ஊழல் என்று சொல்றாங்களே எது ஊழல்! ஊழலே செய்யாத மனிதர் உலகில் யாருண்டு!!? ஒருவரைக் காட்ட முடியுமா ! தான் செய்வது ஊழலே என்று உணராமலேயே பலரும் செய்வதும் அதுவே மற்றவர் செய்யும் போது ஊழலாக தெரிவதுதான் ஊழல் என்று நினைப்பதுதான் இன்று மனித சமுதாயத்தின் இயல்பாகப் போய்விட்டதே ! கள்ளமார்க்கட்டில் டிகட் வாங்கி சினிமா பார்ப்பதேகூட ஊழலுக்குப் போடப்படும் விதையல்லவா!!!? யாரேனும் இதனை எண்ணிப் பார்த்த துண்டா?

புலவர்  சா  இராமாநுசம்

Monday, April 11, 2016

முகநூல் பதிவுகள்!





உறவுகளே!
வயது என்பதைத் தண்டிய நான் பல தேர்தல்களை பார்த்து விட்டேன்! ஆனால் தற்போது நடக்க இருக்கின்ற தேர்தலைப்போல
மிகவும் கேவலமான நிலையினை இதுவரை கண்டதில்லை!இங்கு நாளும் நடை பெற்ற கூட்டணி கூத்துகளும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுக்கு, ஒன்று சளைத்தல்ல என்பது போல அலைந்த அவலமும்,
மக்கள் நலனில் யாருக்கும் அக்கறை இல்லை என்பதைக் காட்டுவதோடு சீட்டுப் பங்கீடும், அனைவருக்கும் பதவி ஆசை! என்பதை விட பதவிவெறியும்
  பிடித்து ஆட்டுகிறது என்பதே உண்மை!
எதிர்காலத் தமிழகம் என்ன ஆகுமோ !!!?




உறவுகளே ஓர் ஐயம்!
இதுவரை எல்லா அரசியல் கட்சிகளும் இலவசம் கொடுப்பது கூடாது அவ்வாறு கொடுப்பது மக்களைக் கெடுப்பது என்றும் இன்று
பேசுவது பெரும்பான்மை ஆகிவிட்டது! ஆனால் ஒவ்வொரு குடிசை வீட்டிற்கும் ஒரு மின் விளக்கே அனுமதித்துள்ள அரசு தொலைகாட்சி பெட்டி ,கிரைண்டர், மிக்ஸி என பலமின் இணைப்புகளை வைத்துக் கொள்ள அனுமதித்து எப்படி ( மீட்டர் ) இல்லாமல் என்று யாரும் கேட்க வில்லையே !என்பதுதான் என்னுடைய ஐயம்! யாரும் அப்படி கேட்கமாட்டார்கள்! அப்டிக் கேட்கும் கட்சிக்கு குடிசை வாசிகளின் ஓட்டு வருமா!!!?


நினைக்கத் தனக்கு என்பார்கள்! அதன் பொருள் என்ன! ஒருவன் தன் உள்ளத்தில், அடுத்தவன் கெட வேண்டுமென நினைத்தால் அது அவனுக்கே வந்து சேரும்! அடுத்தவனும் வாழட்டும் என்று நினைத்தால் இவ்வனும் வாழ்வான்! என்பதாம்! இதையேதான் வள்ளுவரும் , உள்ளுவ(து) எல்லாம் உயர்வுள்ளல் என்றார்

உறவுகளே!
வணக்கம்!
அனைவரும் நம்மை மதிக்க வேண்டும் என்று நினைப்பது இயற்கையே! அதற்காக நாம் பெரிதாகச் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்! முதலில் நாம் அனைவரையும் மதித்து நடந்தாலே போதும் !பிறகு , பாருங்கள்!பிறர் நம்மை மதிப்பது
உங்களுக்கே தெரியும்!

புலவர்  சா  இராமாநுசம்

Monday, February 29, 2016

முகநூல் பதிவுகள்!



முப்பால் என்று அழைக்கப்படும் , திருக்குறளில் காமத்துப்பால் பற்றி சில கருத்து வேறுபாடுகள் ,அதாவது காமம் என்றாலே அது ஒரு வெறுக்கத் தக்க சொல் என்பது போல பேசுவதுண்டு! ஆனால் வள்ளுவர் காதலைத்தான் காமம் என்று குறிப்பிடுகிறார் அவர் வாழ்ந்த காலத்தில் அதுதான் வழக் காறாக இருந்தன! அவர் காதலைப்பற்றி, அதன் உணர்வுகளை , எவ்வளவு நுட்பமாக நாகரிகமாக நயம்பட எழுதியுள்ளதை படிப் பவர் பாராட்டாமல் இருக்க இயலாது . நாளை முதல் அவை பற்றி ஆய்வோம்!

உறவுகளே!
வணக்கம்! நேற்று, நான் வள்ளுவரின் காமத்துப்பால் பற்றி எழுதியிருந்தேன்!அதனை மு.வ போன்ற அறிஞர்கள் இன்பத்துப்பால் என்று குறிப்பிடுகின்றார்களே ,என உறவுகள் சிலர் கூறியுள்ளனர் ! எப்படி அழைத்தாலும் பொருள் ஒன்றுதானே! சொல்வதின் நோக்கம் காதலைத்தானே! அதாவது, போத்திக் கொண்டு படுத்தாலும், படுத்துக் கொண்டு போத்தினாலும் நோக்கம் போத்திக் கொள்ள வேண்டும் என்பதுதானே! 

   புலவர்  சா  இராமாநுசம்

Monday, February 1, 2016

முகநூல் பதிவுகள்!


பொதுவாக திருக்குறளை உலகப் பொதுமறை என்கிறோம்! காரணம் அது எல்லாநாட்டுகும் எல்லா மதங்கள், சமயங்களுக்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய கருத்துக்களை கொண்டிருப்பதே ஆகும் என்பர் !ஆனால் அதில் சொல்லப்பட்டுள்ள சில குறள்களின் கருத்துகள் சில இக்காலத்திற்கும் சில நாடுகளுக்கும் பொருந்தாது எனவும் ஒரு சிலர் சொல்கிறார்களே! உங்கள் கருத்தென்ன!!!?

சாதரணமாய் மனித மனம் நடந்த பிழையை தான் ஏற்றுக் கொள்ளாமல் பிறர்மேல் சாற்றுவது நடை முறையாக உள்ளது! உதாரணமாக , ஒருவன் படி இடித்தது வலிக்கிறது என்கிறான்! ஆனால் ,உண்மையில் படிவந்தா இவனை இடித்தது! இல்லையே! இவனே , கவனிக்காமல் படியில் இடத்துக் கொண்டு, படி இடித்தது என்கிறான்! இதுபோலத்தான் வாழ்வில், சில நிகழ்வுகள்! நடக்கின்றன! ஆனால் யாரும் எண்ணிப் பார்பதில்லை!

காலமாற்றத்தால் கருத்துகளும் பழக்க வழக்களும் மாறத்தான் செய்யும் என்பது உண்மைதான்! அவை ,முதலில் கசந்தாலும் படிப்படியா நடைமுறையாக பழகித்தான் போகின்றன! முன்பெல்லாம் கணவன் பெயரைச்
சொல்லவே மனைவிமார் விரும்ப மாட்டார்கள்! ஆனால்!? இன்று! அப்படியா! தன் கணவன் பெயரைச் சொல்லி அழைப்பதையும் தாண்டி , வாடா, போடா ,என பேசிக் கொள்வதை பல குடும்பங்களில் பார்கிறோம்! அதுமட்டுமா இந்நிலை சினிமாவிலும் சீரியலிலும் சர்வ சாதரணமாகிட்டது ! வயதான என்னைப் போன்றவர் வருந்தினாலும் பயன் இல்லையே!

புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, October 23, 2013

முகநூல் பதிவுகள்





  நாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும். அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும்
பாதையைத்தான் காட்டுமே தவிர அது நம்மோடு வராது
நாம் தான் நம்முடைய இடத்திற்கு போக வேண்டும் அது போலத்தான் நம் வாழ்கையிலும் பெரியோர்கள் வழிகாட்டியாகத்தான் இருப்பார்கள்! நாம்தான் எச்செயலையும் முயன்று முடிக்க வேண்டும்!

கல்லை மடியில் கட்டிக் கொண்டு கிணற்றில் வீழ்ந்தான் ஒருவன்! அவன் சாகத் துணிந்தவன்! ஆனால் கல் தடுக்கி
கிணற்றில் வீழ்ந்தான் ஒருவன்! இரண்டும் ஒன்றா!? இல்லையே! வீழ்ந்தான் என்ற செயல் வேண்டுமானால்
ஒன்றாக இருக்கலாம்! இப்படித் தான் வாழ்வில் நாம் மேற்
கொள்ளும் சில செயலும் அமைந்து விடுகின்றன!

கண்ணுக்குத் தெரியாத, தூரத்தில் புகை வந்தால் , அங்கே ஏதோ நெருப்பு , என்று சொன்னால்! நீ போய் பார்த்தாயா என்றா கேட்க முடியும்? ஒன்றை கொண்டு இன்னொன்றை
யூகிப்பது தானே புத்திசாலித்தனம்! ஏனோ, தெரியவில்லை
ஊழல் அரசியல் வாதிகளிடம் சிக்கி, இதை மறந்து ஓட்டுப் போடுகிறோம்!

அழகு  என்பது  எதில்  இருக்கிறது ! பார்க்கும் பொருளிலா  ! பார்க்கும்    மனதிலா !  கடைக்குப் போகிறோம் பல வண்ண  துணிகளைப் பார்க்கிறோம்
 சிலவற்றை ஒதுக்கி  விட்டு நம்  மனதிற்கு, இது அழகுயென பிடித்ததை எடுக்கிறோம்!  பக்கத்தில் உள்ள  ஒருவன்  நாம் ஒதுக்கித் தள்ளியதை தனக்கென  எடுக்கிறான் ! அவனுக்கு , அது பிடித்திருக்கிறது! இப்பொழுது
சொல்லுங்கள் ! அழகு , எங்கே இருக்கிறது !!?


                           புலவர் சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...