நல்லவரே உள்ளாட்சி தேர்தலிங்கே-பதவி
நாற்காலி போட்டிதான் பாரும்நன்கே
சொல்லமனம் கூசுதையா பேசிப்பங்கே-தாம்
சொன்னதற்கு மாறாக சொல்லியங்கே
வெல்லவழி போடுகின்றார் ஆளக்கூட்டே-அட
வெட்கமின்றி கேட்பாராம் தினமும் ஓட்டே
கள்ளஓட்டு போடுவதும் உண்டேஉண்டு-எல்லா
கட்சிகளும் செய்யுமந்த தொண்டேதொண்டு
ஒட்டிகிட்ட கட்சிகளே உதிரியாச்சே-இன்று
உதறஅம்மா உதறஐயா உண்மையாச்சே
வெட்டுகுத்து ஊர்தனிலே நாளுமாகும்-உள்ள
வீதியிலே வீட்டுக்கொரு சண்டையாகும்
பெட்டிவரும் சாதிவரும் ஓட்டுகேக்க- போட்டி
போடவேண்டி உறவுகளே பகையநோக்க
பட்டுபோன்ற நட்புகூட கசந்துபோகும்-பாழும்
பதவிஎன்ற பேய்பிடிக்க கிராமமாகும்
ஊற்றாக ஊழலிங்கே பெருகயாரும்-இங்கே
ஊராள வந்தாலும் என்னதேறும்
மாற்றமென்ன கேட்பாரே நாளுமவரே-இனி
மனமாற வழியுண்டா செயின்தவறே
ஆற்றல்மிகு நல்லவர்கள விலகிப்போக-கட்சி
ஆட்களின் சொல்லேதான் சட்டமாக
தோற்றவரும் வென்றவரும தினமேசண்டை
தொடராக செய்வாராம் ஆளும்தொண்டை
வீணாக எதற்கிங்கே தேர்தல்வேண்டும்-நல்ல
விலைதன்னில் வாங்கிடவே பதவித்துண்டும்
காணாத காட்சியா நாமும்முன்னால்-வீண்
கதையல்ல காண்போமே இதனைப்பின்னால்
நாணாத உள்ளத்தை வளர்த்துவிட்டோம்-எது
நடந்தாலும் நமக்கென்ன என்றேகெட்டோம்
தூணாக நல்லோர்கள் வந்தால்தானே-வரும்
தூயதொரு ஆட்சியும் இன்றேல்வீணே
நாற்காலி போட்டிதான் பாரும்நன்கே
சொல்லமனம் கூசுதையா பேசிப்பங்கே-தாம்
சொன்னதற்கு மாறாக சொல்லியங்கே
வெல்லவழி போடுகின்றார் ஆளக்கூட்டே-அட
வெட்கமின்றி கேட்பாராம் தினமும் ஓட்டே
கள்ளஓட்டு போடுவதும் உண்டேஉண்டு-எல்லா
கட்சிகளும் செய்யுமந்த தொண்டேதொண்டு
ஒட்டிகிட்ட கட்சிகளே உதிரியாச்சே-இன்று
உதறஅம்மா உதறஐயா உண்மையாச்சே
வெட்டுகுத்து ஊர்தனிலே நாளுமாகும்-உள்ள
வீதியிலே வீட்டுக்கொரு சண்டையாகும்
பெட்டிவரும் சாதிவரும் ஓட்டுகேக்க- போட்டி
போடவேண்டி உறவுகளே பகையநோக்க
பட்டுபோன்ற நட்புகூட கசந்துபோகும்-பாழும்
பதவிஎன்ற பேய்பிடிக்க கிராமமாகும்
ஊற்றாக ஊழலிங்கே பெருகயாரும்-இங்கே
ஊராள வந்தாலும் என்னதேறும்
மாற்றமென்ன கேட்பாரே நாளுமவரே-இனி
மனமாற வழியுண்டா செயின்தவறே
ஆற்றல்மிகு நல்லவர்கள விலகிப்போக-கட்சி
ஆட்களின் சொல்லேதான் சட்டமாக
தோற்றவரும் வென்றவரும தினமேசண்டை
தொடராக செய்வாராம் ஆளும்தொண்டை
வீணாக எதற்கிங்கே தேர்தல்வேண்டும்-நல்ல
விலைதன்னில் வாங்கிடவே பதவித்துண்டும்
காணாத காட்சியா நாமும்முன்னால்-வீண்
கதையல்ல காண்போமே இதனைப்பின்னால்
நாணாத உள்ளத்தை வளர்த்துவிட்டோம்-எது
நடந்தாலும் நமக்கென்ன என்றேகெட்டோம்
தூணாக நல்லோர்கள் வந்தால்தானே-வரும்
தூயதொரு ஆட்சியும் இன்றேல்வீணே


