Saturday, February 18, 2012

ஈழ வளமையை மீண்டும் தருவாயா...?

       எழுத எண்ணி எழுந்தேனே-ஆனால்
            இதயம் விம்ம அழுதேனே
        அழுத புலம்பல் கேட்கிலையா-ஈழம்
            அலறிய சேனலை நோக்கிலையா
        விழுதையும் வெட்டி எறிந்தானே-சிங்களன்
            வெறியொடு எங்கும் திரிந்தானே
        தொழுதேன் இறைவா வருவாயா-ஈழத்
              துயரை நீக்கித் தருவாயா

        நாதியும்  அற்றுப் போனானே-தனக்கோர்
             நாடும்  அற்றுப் போனானே
        பீதியே இறைவா எந்நாளும்-ஈழம்
            பெற்றால் உனக்கோர் திருநாளாம்
        வீதி உலாவும்  வருவாயே-எம்
           வேண்டுதல் நடத்தி தருவாயே
        நீதி இல்லா  உலகமிது –துளியும்
           நேர்மை யில்லா உலகமிது


        உன்னை விட்டால் வழியில்லை-ஏனோ
            உனக்குமா கருணை விழியில்லை
        பொன்னை நாங்கள் கேட்கவில்லை-வேறு
             பொருளை நாங்கள் கேட்கவில்லை
        அன்னை ஆமாம் தமிழீழம்-தமிழன்
            ஆண்டால் தானே வளம்சூழும்
        மண்ணை விட்டுத் தரமாட்டோம்-அடிமை
            மண்ணில் உயிரை விடமாட்டோம்

        எத்தனை நாடுகள் இங்குண்டாம்-அவை
             இருந்தும் என்ன பயன்கண்டோம்
        சித்தம் வைப்பாய் இறைவாநீ-வந்து
              செய்வாய் அருள்வாய் விரைவாநீ
        எத்தர்கள் சிங்களர் கயவர்களே-பெரும்
             இனவெறி மொழிவெறி கொடியர்களே
         புத்தரைப் போற்றும தகுதியில்லை-அவர்
             போதனைக் ஏற்கும நாடில்லை


          வருவாய்  இறைவா  வருவாயா-ஈழ
             வளமையை  மீண்டும்  தருவாயா
          திருவாய்  திகழ்ந்ததே எம்தேசம்-சிங்கள
             தீயோர் செய்தார்  படுநாசம்
         ஒருவாய் சோற்றுக்கும் படும்தொல்லை-வேலி
             ஓரம்தானே அவர் எல்லை
         கருவாய்  உருவாய் அழிந்தாரே-உலகம்
            காணவும் கண்ணீர் பொழிந்தாரே
      
  புலவர் சா இராமாநுசம்

                                                              

10 comments :

  1. ஆம்! ஒவ்வொரு தமிழனிலும் கண்ணீர் வடிந்து கொண்டுதானிருக்கிறது. இறைவன் என்பவன் இருந்து, அவன் இதைச் சீர் செய்தால் மகிழலாம்!

    ReplyDelete
  2. உன்னை விட்டால் வழியில்லை-ஏனோ
    உனக்குமா கருணை விழியில்லை
    பொன்னை நாங்கள் கேட்கவில்லை-வேறு
    பொருளை நாங்கள் கேட்கவில்லை..

    ஈழம் வேண்டும்..ஈழமே வேண்டும்..

    ReplyDelete
  3. வேண்டுவதை வேண்டுமென
    வேண்டிக்கேட்கிறேன்
    வேண்டியதை தந்துவிடு...

    ReplyDelete
  4. நல்ல பதிவு... நன்றி..

    ReplyDelete
  5. அருமை ஐயா.
    வேதனை தான்.

    ReplyDelete
  6. \\திருவாய் திகழ்ந்ததே எம்தேசம்-சிங்கள
    தீயோர் செய்தார் படுநாசம்
    ஒருவாய் சோற்றுக்கும் படும்தொல்லை-வேலி
    ஓரம்தானே அவர் எல்லை
    கருவாய் உருவாய் அழிந்தாரே-உலகம்
    காணவும் கண்ணீர் பொழிந்தாரே\\

    நெஞ்சத்தை நெகிழ்த்திய வரிகள் ஐயா.

    கனலும் துயரும் கவிதை வடிவாய்...

    கருக்கும் ஒருநாள் கயவர்தம்மை!
    \

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா,
    ஈழ தேசம் விரைவில் மலரனும் எனும் ஆசையினை தாங்கி வந்திருக்கிறது இக் கவிதை! ஏலவே இக் கவி படித்திருக்கிறேன்! ஆனாலும் மீண்டும் படிக்கையில் நம்பிக்கை மட்டும் தான் மனதில் எஞ்சுகிறது.

    ReplyDelete
  8. ஒவ்வொரு தமிழனின் வேண்டுதல் இதுவாக தான் இருக்கும் புலவரே கண்டிப்பாக இறைவன் தருவார்

    ReplyDelete
  9. மிகவும் சிறப்பன் ஆக்கம் தமிழன் நிலம் வேண்டும் என வேண்டுவது மிகவும் சிறப்பு உடனே கிடைக்க துனைநிர்ப்போம்.

    ReplyDelete
  10. உங்கள் கவிதை தொகுப்பு வெளியீடு புத்தகம் பற்றி பதிவர் கணேஷ் பதிவிட்டிருந்தார்.கண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...