Wednesday, December 5, 2012

இதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே



இதுவென்  பதிவே  மூன்னூற்று  ஐம்பதே
புதுமலர்  போன்றே  பூத்திட  காத்திட
மதுநிகர்  மறுமொழி தந்தெனை  வாழ்த்திட
நிதியெனத்  தந்த  நீங்களே ஆகும் !

என்னிரு  கரங்களை  என்றும்  கூப்பியே
மன்னிய  உலகில்  மன்னும்  வரையில்
எண்ணியே  தொழுவேன்   இணையில்  உறவுமை
கண்ணின்  மணியெனக்  கருதியே வாழ்வேன்  !

சுயநலம்  கருதா  சொந்தங்கள்  நீரே
பயனெதிர்  பாரா  பண்பினர்  நீரே
நயமது மிக்க நண்பினர்  நீரே
செயல்பட  என்னைச்  செய்தவர்  நீரே !

எண்பது  வயதைத்  தாண்டியே  இருப்பதும்
உண்பதும்  உறங்கலும்  உம்மிடை இருப்பதும்
என்புடை தோலென  என்னெடு  இருப்பதும்
அன்புடை  உம்மோர்  ஆதர   வன்றோ !

இனியும்  வாழந்திட  என்வலை  வருவீர்
கனியென  இனித்திடக்  கருத்தினைத் தருவீர்
பனிமலர்  போன்றே  குளுமையும்  தோன்ற
நனிமிகு  நாட்களும்! வாழ்வேன்  நன்றி!நன்றி!
                        புலவர் சா இராமாநுசம்

36 comments :

  1. மனம் கனிந்த வாழ்த்துக்கள் பெருந்தகையே...

    இன்னும் பல்லாயிரம் படைத்திடுவீர்...
    தமிழின் இனிமை சுவைக்க
    வண்டுகளாய் நாங்கள் எப்போதும்
    வந்துகொண்டே இருப்போம்....

    ReplyDelete
  2. எண்பது வயதிலும் இந்த வலையுலகில் உறவாடி முன்னூற்று ஐம்பதாவது பதிவினைத் தந்திட்ட புலவர் அய்யாவுக்கு நன்றி!

    ReplyDelete
  3. இன்னும் பல படிகளைத் தாண்டி பேரும் புகழ்ச்சியும் பெறுவீர்கள் ஐயா. அருமையாக எங்களுக்கு நன்றி சொல்லிருக்கிறீர்கள். நாங்கள் எப்பொழுதும் உங்கள் பதிவைத் தொடர்ந்து வருவோம்.

    ReplyDelete
  4. 350 பதிவுகளா, இந்த வயசுலேயும் இந்த வேகம். நன்றி :-)))

    ReplyDelete
  5. பயனெதிர் பாரா பண்பினர் நீரே//அருமையாக சொல்லிருக்கிறீர்கள் நன்றி

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் ஐயா 350 பதிவுகளை தந்ததற்கு! இன்னும் பல நூறு பதிவுகள் இட வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  7. அழகான கவிதையும் அழகான நினைவுகூறலும்
    வாழ்த்துக்கள் ஐயா இன்னும் பல வெற்றிப் பதிவுகளுடன் தொடர

    ReplyDelete
  8. சிறப்பான வகையில் நன்றி கூறி
    உள்ளீர்கள் . இன்னும் இன்னும்
    என எண்ணும் படி இருக்கிறது
    கவிதை. நன்றி !

    ReplyDelete
  9. ஐயா தங்களின் ஆசியும் ஆர்வமும் எங்களுக்கும் கிடைக்க ஆசிர்வதியுங்கள்.

    ReplyDelete
  10. தங்களின் சுறுசுறுப்பும் உற்சாகமும் எங்களையும் தொற்றி சிறக்க வாழ்த்துங்கள் ஐயா! வணங்குகிறேன்!

    ReplyDelete
  11. ஐயா அடுத்தடுத்த வருடங்களில் ஐநூறும் பின் ஆயிரம் பதிவுகளும் தாண்டி தாங்கள் எழுத வாழ்த்துகள்

    ReplyDelete
  12. உங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். எனக்கெல்லாம் கண்ணைக் கட்டுது அடிக்கடி! :-))

    வாழ்க ஐயா! என்றும் உங்களது வழிகாட்டுதல் வேண்டும்!

    ReplyDelete
  13. தங்கள் கவித் திறனை பதிவிலும்
    ஈகைத் திறனையும் சிறியன சிந்தியா தன்மையும்
    நேரில் கண்டும் பெரும் மகிழ்வு கொள்கிறேன்
    பதிவுகள் பல்லாயிரமாய் தந்து
    எம் போன்றோர்க்கு வழிகாட்ட அன்புடன்
    வேண்டுகிறேன்


    ReplyDelete
  14. உங்கள் வேகம் வியக்க வைக்கின்றது. தங்கள்ஆசீர்வாதத்தை வேண்டி நிற்கின்றோம்.

    ReplyDelete
  15. நீடூடி வாழ்ந்து எங்களையும் வாழ்த்துங்கள் புலவர் ஐயா.

    ReplyDelete
  16. வாழ்த்துகள் புலவர் ஐயா. இன்னும் பல நூறு பதிவுகள் எழுதி எங்களையும் வழிநடத்திட வேண்டும்....

    ReplyDelete
  17. தங்கள் வயதில் இது ஒரு பெரிய சாதனை ஐயா.
    இளம்பதிவர்களுக்கெல்லாம் தாங்கள் ஒரு சிறந்த முன்னோடியாக விளங்குகிறீர்கள்.

    இன்னும் பல ஆயிரம் பதிவுகள் இட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. அருமை. இன்னும் பல கவி படைக்க, வாழ்த்த வயதில்லை என்றாலும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  19. இந்த வயதிலும் இத்தனை சுறு சுறுப்பா. நல்ல விஷயம்தான். ரொம்ப சந்தோஷமா இருக்கு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  20. 350 எல்லாம் உங்கள் இளமை வேகத்துக்கு ஜுஜுபி! இறை அருளால் பதிவிலும் ஆயிரம் காண வாழ்த்துகிறேன்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...