எழுவாய்த் தமிழா எழுவாயா-அணையை
இடித்த பின்னர் அழுவாயா
வழுவாய்ச் சொல்லியே துடிக்கின்றார்-நீர்
வழங்கிட பொய்பல தொடுக்கின்றார்
தொழுவாய் எதற்கு வடநாடே-அவர்
துணையால் நடப்பதே இக்கேடே
கழுவாய் எதிர்ப்புப் போராட்டம்-அதைக்
கண்டவர் புத்தி மாறட்டும்
முல்லைப் பெரியார் அணைமட்டும்-அந்த
மூடர்கள் கை யால் உடையட்டும்
எல்லைப் போரே நடந்திடுமே-நம்
ஏக இந்தியா உடைந்திடுமே
தொல்லை மத்தியில் ஆள்வோரே-உடன்
துடிப்புடன் விரைந்து தடுப்பீரே
இல்லை என்றால் பெரும்போரே-இங்கு
ஏற்படும் பொறுப்பு ஆள்வோரே
திட்டம் இட்டே செய்கின்றார்-அவர்
தினமும் பொய்மழை பெய்கின்றார்
கொட்டம் இனிமேல் செல்லாதே-தமிழன்
குமுறும் எரிமலை பொல்லாதே
சுட்டால் தெரியும் நண்டுக்கே-எடுத்துச்
சொன்னால் புரியா மண்டுக்கே
பட்டே அறிந்திடல் கேரளமே-நல்ல
பண்பா ? அறித்திடு கேரளமே!
அனைவரும் ஒன்றாய் சேருகின்றார்-நம்
அணையை உடைக்கக் கோறுகின்றார்
இனியென தமிழகம் திரளட்டும்-நம்
எழுச்சியை உலகம் உணரட்டும்
தனியொரு புதுயுகம் தோன்றட்டும்-பின்
தக்கதோர் பாடம் கற்கட்டும்
மனித நேயமே அற்றவர்கள்-பாபம்
மனதில் நோயே உற்றவர்கள்
உதிரிப் பூவாய் கட்சிகளே-இங்கே
உள்ளது சரியா கட்சிகளே
எதிரிகள் அனைவரும் ஒன்றாக-அங்கே
இருப்பதைக் காண்பீர் நன்றாக
சதிபல அன்னவர் செய்கின்றார்-ஏற்ற
சமயம் இதுவென முயல்கின்றார்
மதிமிகு தமிழா எழுவாயா –நம்
மானத்தை உரிமையைக் காப்பாயா
மீள்பதிவு
புலவர் சா இராமாநுசம்
நண்பரே,
ReplyDeleteதங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
http://www.tamilkalanchiyam.com
- தமிழ் களஞ்சியம்
மிக்க நன்றி!
Deleteஆம்... தமிழர் எழுச்சி கொண்டு சீற்றத்தை வெளிப்படுத்தினால்தான் நிலைமை மாறும். நன்கு சொன்னீர்கள் ஐயா.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஎழுச்சியூட்டும் அருமையான கவிதை
ReplyDeleteஇறந்தவனைக் கூட எழுப்பலாம்
தூங்குவதைப் போல நடிப்பவர்களை
எப்படி எழுப்புவது ?
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி!
Deletetha.ma 3
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteமிக்க நன்றி!
Deleteஆம்.. தமிழன் எழ வேண்டும்..மானத்தையும் உரிமையையும் காக்க வேண்டும்..
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஉற்சாகத்துடன் அனைவரும் ஒன்றுபட வேண்டும்...
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,
ReplyDeletehttp://otti.makkalsanthai.com/
பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,
மிக்க நன்றி!
Deleteதங்கள் வரிகளாவது எழ வைக்கிறதா பார்ப்போம் ஐயா.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஎழுச்சியூட்டும் பா
ReplyDeleteமிக்க நன்றி!
ReplyDelete