Monday, January 6, 2014

என் முகநூல் பதிவுகள்-7





ஒரு செயல் நடை பெறாமல் கெட்டு போவதற்கு இருவைக் காரணங்கள் உள்ளன! ஒன்று , நாம் செய்யவேண்டாத , செய்வதற்குத் தகுதி அற்ற, செயலை , செய்ய முனைந்தால்
அதனால் கெடுதல் உறுதியாக வரும் இரண்டு! செய்ய வேண்டிய செயலை, செய்யவேண்டிய நேரத்தில் செய்யாமல் விட்டாலும் கெடுதல் உறுதியாக வரும்

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும். (குறள்)


புத்தாண்டு பிறந்து விட்டது! தினசரி நாள்காட்டி ஒன்றை வாங்கி வீட்லே தொங்க விட்டிருப்போம்! இன்று, தேதி , இரண்டு ! காலையிலேயே நாள் காட்டியில் ஒரு,தாளை
கிழிச்சிருப்போம்! பொதுவா நாம் கிழிச்சது ஒரு தாளென
நினைச்சிருப்போம்! ஆனா , நாம் கிழிச்சது ஒரு தாளை
மட்டுமல்ல! நம் வாழ்கையின் , ஒரு நாளையும் கிழிச்சோம்
என்பது எத்தனை பேருக்குத் தெரியும்! அதை, வள்ளுவர் தெளிவா உணர்ந்து சொல்வார்!

நாள்என ஒன்றுபோல் காட்டி உயிரீரும்
வாள்அது உணர்வார் பெறின்.( குறள்)


அனுபவம் மிக்க அறிவு சார்ந்த பெரியாரோடு தொடர்பு கொண்டு ஆராய்ந்து , சிந்தித்து செய்யும் எந்ததொரு செயலையும்,
செய்ய, முயல்வாற்கு , செய்ய அரிய செயல் என்று, எதுவுமில்லை!

தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்(கு)
அரும்பொருள் யாதொன்றும் இல் (குறள்)


ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்றால் அவர். நோய் நீக்க என்ன வழிமுறைகளைச் செய்ய வேண்டும் என்பதுபற்றி கூட
வள்ளுவர் மிகத் தெளிவாக சொல்லியுள்ளார்

முதலில், மருத்துவர் , வந்த நோயாளியிடம் என்ன நோய் என்பதை விரிவாக விசாரித்து
அறிந்து, அதன் பின் நோய்வந்த காரணத்தையும் தெளிவாக அறிய வேண்டும். பின்னர், அதனைப் போக்கும் ,உரிய மருந்து
எது, என்பதையும் கண்டறிந்து, பிறகு, அதனை எந்த வகையில் நோயாளிக்குத் தருவதெனவும் முடிவு செய்ய வேண்டும்

நோய்நாடிநோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.-குறள்


உலகில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வதற்குச் செல்வம் தேவை! ஆகவே அதனைப் பெற பல வகையில் முயற்சி செய்யறோம்!ஆனால் , அச் செல்வமானது, நாம் தேடாமலேயே,( அதுவே )நம்மை அடைய வழி கேட்டு வருவதற்கு ,வள்ளுவர்
சொல்வது, நாம் செய்யும் எச்செயலையும் ஊக்கத்தோடு செய்யும் தன்மை நம்மிடம் இருந்தால் போதும் என்பதே ஆகும்!


                              புலவர்  சா  இராமாநுசம்

10 comments :

  1. வணக்கம்
    ஐயா.

    சிறப்பாக சொல்லியுள்ளிர்கள்... மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. "எச்செயலையும் ஊக்கத்தோடு செய்யும் தன்மை" ஒரு மனிதன் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு வேண்டிய மிக முக்கியமான குணாதிசயமாகும். அதை வலியுரித்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. வள்ளுவர் தெளிவா உணர்ந்து சொன்னது உட்பட அனைத்தும் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. சிறப்பாக விளக்கியுள்ளீர்கள் ஐயா..

    //நாம் கிழிச்சது ஒரு தாளை
    மட்டுமல்ல! நம் வாழ்கையின் , ஒரு நாளையும் கிழிச்சோம்
    என்பது எத்தனை பேருக்குத் தெரியும்! //

    உண்மையான வரிகள்.

    ReplyDelete
  5. உண்மைதான் . செய்யக் கூடாதவற்றை செய்வதால் கெடும்; செய்ய வேண்டியவற்றைச் செய்யாத தாலும் கெடும் என்ற அழகிய குறளுக்கு அருமையாக விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  6. சிறந்த கருத்துப் பகிர்வு

    ReplyDelete

  7. வணக்கம்!

    தமிழ்மணம் 3

    அகமேல் அணிய அரும்புலவா் தந்தார்
    முகநுால் பதிவை முனைந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  8. சிறப்பான முகநூல் பகிர்வு கண்டு மகிழ்ந்தேன் .மிக்க நன்றி ஐயா
    பகிர்வுக்கு .

    ReplyDelete
  9. சிறப்பான பகிர்வு.

    முகநூல் பகிர்வுகள் அனைத்துமே அருமை.

    ReplyDelete
  10. குறளுக்கு புலவர் ராமானுசம் உரை என்றே போற்றுகிறேன் .
    உங்களின் முகநூல் பதிவுகள் 7க்கு 7வது வாக்கு போடும் பாக்கியம் கிடைத்தது .

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...